உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, மார்ச் 18, 2011

பிளஸ் 2 கணித பாட கேள்வித் தாளில் குளறுபடி


ராசிபுரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்ட பிளஸ் 2 மாணவர்கள்.

              ப்ளஸ் 2 கணித பாட கேள்வித் தாளில் குளறுபடிகள் ஏற்பட்டுள்ளதாக மாணவர்கள் புகார் தெரிவித்து வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.  

                  ப்ளஸ் 2 கணிதத் தேர்வு வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் கணித பாட கேள்வித் தாளில் உள்ள சில கேள்விகளில் குளறுபடிகள் ஏற்பட்டதால் மதிப்பெண்கள் குறையும் வாய்ப்புள்ளதாக மாணவ மாணவியர்கள் புகார் தெரிவித்தனர்.  ராசிபுரம் அருகே கீரனூரில் உள்ள தனியார் பள்ளியில் தேர்வு மையத்தில் வழங்கப்பட்ட வினாத்தாள்களை பெற்ற மாணவ மாணவியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். 

              இதில் பி டைப் கணித பாட கேள்வித் தாளில் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டதால் மாணவ மாணவிகள் குழம்பி போய் பதில் அளிக்க தடுமாறினர். ஒரு மார்க் 11-வது கேள்வியில் டிவைடர் குறி மறைந்துள்ளது.  அதேபோல் 16-வது கேள்வியில் மைனஸ் குறி பிரிண்ட் ஆகவில்லை. 27-வது கேள்வியில் பை இல்லை. 28வது கேள்வியில் பேக்டோரியல் எண் இல்லை.  6 மார்க் கேள்வியில் 41-வது கேள்வியில் மைனஸ் இல்லை. 42-வது கேள்வியில் சமன் குறி இல்லை. 51-வது கேள்வியில் 16 என்ற எண் இல்லை. 55-வது கேள்வியில் மைனஸ் குறி இல்லை. 10 மார்க் கேள்வியில் 57-வது கேள்வியில் சமன் குறி இல்லை. 

                அதேபோல் 64 மற்றும் 70-வது கேள்விகள் சரியாக பிரிண்ட் ஆகவில்லை.  மொத்தம் 58 மதிப்பெண்களுக்கான கேள்விகளில் பல குறியீடுகள் மற்றும் எழுத்துகள் சரியாக பிரிண்ட் ஆக வில்லை என மாணவர்கள் குறிப்பிட்டனர்.  இதனால் மதிப்பெண்கள் பெறுவது பாதிக்கும் என்பதால் மாணவர்கள் தேர்வு எழுதியபின், மல்லூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து மறியல் போராட்டம் நடத்தினர். 

              பல மணி நேர மறியலால் போக்குவரத்து பாதித்தது. பின்னர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் விஜயராகவன் மற்றும் காவல்துறையினர் மாணவர்களிடம் சமரசப் பேச்சு நடத்தினர். இந்த பிரச்சினையில் பள்ளிக் கல்வி துறை உயர் அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதையடுத்து மாணவர்கள் மறியலை கைவிட்டனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior