உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, மார்ச் 18, 2011

கடலூர் மாவட்டத்தில் வேட்புமனு தாக்கல் செய்யும் இடங்கள்

கடலூர் மாவட்டத்தில்  

வேட்புமனு தாக்கல் செய்யும் இடங்கள்


 
கடலூர்:
 
                 2011 சட்டமன்ற தேர்தலுக்காக கடலூர் மாவட்டத்தில் உள்ள கடலூர், குறிஞ்சிப்பாடி, பண்ருட்டி, சிதம்பரம், விருத்தாச்சலம் நெய்வேலி, புவனகிரி, காட்டுமன்னார்கோவில் (தனி), திட்டக்குடி (தனி) ஆகிய 9 சட்டமன்ற தொகுதிகளுக்கும் எந்தெந்த இடங்களில் வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும் என்பது பற்றிய விவரம் வெளியிடப்பட்டுள்ளது.


விபரம் :
கடலூர் சட்டமன்ற தொகுதி:
                   கடலூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுகிறவர்கள் கடலூர் உதவி கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரியான உதவி கலெக்டர் முருகேசனிடம் வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும். 
விருத்தாசலம் சட்டமன்ற தொகுதி:
              விருத்தாசலம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுகிறவர்கள் விருத்தாச்சலம் உதவி கலெக்டர் அலுவலகத்தில் உதவி கலெக்டரும், தேர்தல் நடத்தும் அதிகாரியுமான முருகேசனிடம் வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும்.

நெய்வேலி சட்டமன்ற தொகுதி:

            நெய்வேலி சட்டமன்றதொகுதியில் போட்டியிடுகிறவர்கள் நெய்வேலியில் உள்ள தனித்துணை ஆட்சியர் (நிலஎடுப்பு) அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும். 
 பண்ருட்டி சட்டமன்ற தொகுதி:
                பண்ருட்டி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுகிறவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட ஆதிதிராவிடர் நல அதிகாரி அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும்.

குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதி:

              குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுகிறவர்கள் கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தனித்துணை ஆட்சியர் (முத்திரைத்தாள்) அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும். 
புவனகிரி சட்டமன்ற தொகுதி:

                 புவனகிரி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுகிறவர்கள் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட வழங்கல் அதிகாரி அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும்.
 
சிதம்பரம் சட்டமன்ற தொகுதி:

            சிதம்பரம் தொகுதியில் போட்டியிடுகிறவர்கள் சிதம்பரம் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரான உதவி கலெக்டர் இந்துமதியிடம் வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும். 
 காட்டுமன்னார்கோவில் (தனி) சட்டமன்ற தொகுதி:
           காட்டுமன்னார்கோவில் (தனி) சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுகிறவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கலால்துறை உதவி ஆணையர் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்ய வேண்டும்.
 
திட்டக்குடி (தனி) சட்டமன்ற தொகுதி
               திட்டக்குடி (தனி) சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுகிறவர்கள், கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அதிகாரி அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும். 
முக்கிய நாட்கள்:
              வேட்புமனு தாக்கல் செய்ய வருகிற 26-ந்தேதி கடைசிநாளாகும். 28-ந்தேதி வேட்பு மனுக்கள் பரிசீலனை நடைபெறும். வேட்பு மனுக்களை வாபஸ் பெறுவதற்கு கடைசி நாள், வருகிற 30-ந் தேதி ஆகும். ஏப்ரல் 13-ந் தேதி புதன்கிழமை அன்று ஓட்டுப்பதிவு நடைபெறும். மே மாதம் 13-ந் தேதி அன்று ஓட்டு எண்ணிக்கை நடைபெறுகிறது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior