உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், மே 30, 2011

கடலூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தை நகர பகுதிக்கு மாற்ற வேண்டும்: ஆட்டோ ஓட்டுனர் சங்கம் வலியுறுத்தல்

கடலூர் : 

           வட்டார போக்குவரத்து அலுவலகத்தை நகர பகுதிக்கு மாற்ற வேண்டும் என கடலூர் நகர ஆட்டோ ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள் கூட்டமைப்பு நலச் சங்கம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. 

             கடலூர் நகர ஆட்டோ ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள் கூட்டமைப்பு நலச் சங்கக் கூட்டம் திருப்பாதிரிப்புலியூர் ரயில்வே ஆட்டோ சங்க அலுவலகத்தில் நடந்தது. நகர தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். செயலர் முருகேசன் முன்னிலை வகித்தார். துணைச் செயலர் சண்முகம், பொருளாளர் ஜெயக்குமார், கவுரவத் தலைவர் செல்வமூர்த்தி, துணைத் தலைவர் அமானுல்லா ஷெரீப் உள்ளிட்டோர் பேசினர். கூட்டத்தில், புதிதாக அமைந்துள்ள தமிழக அரசுக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. 

             குறிஞ்சிப்பாடி தொகுதியில் அமைத்துள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தை கடலூர் நகர பகுதிக்கு மாற்ற வேண்டும். 8ம் வகுப்பு படித்தவர்களுக்கு ஓட்டுனர் உரிமம் வழங்க வேண்டும். பெட்ரோல் விலை மற்றும் ஆட்டோ காப்பீட்டு தொகையை உயர்த்தியதை கண்டிப்பது. பசுமை வரியை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். ஆட்டோ கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 



0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior