உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், மே 30, 2011

என்.எல்.சியில். சி.ஐ.டி.யூ சார்பில் ஆர்ப்பாட்டம்

நெய்வேலி:

                  என்.எல்.சி. தொழிலாளர் ஊழியர் சங்கத்தின் (சி.ஐ.டி.யூ.) சார்பில் நெய்வேலி புதுநகர் 19-வது வட்டம் மெயின் பஜார் காமராஜர் சிலை அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு சங்க தலைவர் குப்புசாமி தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் வேல்முருகன் முன்னிலை வகித்தார்.

* என்.எல்.சி. நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியத்தை அமுல்படுத்த வேண்டும்.

* அலுவலக பணி நேரம் மாற்றத் திட்டத்தை நிர்வாகம் உடனடியாக கைவிட வேண்டும்.

* இரவு பணியில் வேலை பார்க்கும் தொழி லாளர்களுக்கு, அதிகாரி களுக்கு இணையாக ரூ.60-ல் இருந்து ரூ.80 ஆக உயர்த்தி தர வேண்டும்.

* இன்கோசர்வ் தொழிலாளர்களுக்கு பணிக்காலத்தை கணக்கில் எடுத்துக்கொண்டு 15 ஆண்டு கள் பணி முடித்தவர்களுக்கு வெகுமதி அளிக்க வேண்டும்.

* போனஸ்- இன்சென்டிவ் அலவன்ஸ்களில் வித்தி யாசம் இல்லாமல் அதிகாரி களுக்கு இணையாக வழங்க வேண்டும்.

* உணவக தொழிலாளர்களின் பதவி உயர்வை சரி செய்ய வேண்டும். உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
 
 
 
 

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior