உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், மே 24, 2011

பாரத் பல்கலைக்கழக பி.இ. பாடத் திட்டத்தில் வாழ்க்கைத் தொழில் கல்விப் பாடம்

               மாறி வரும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப மாணவர்கள் தங்களை தயார்படுத்திக் கொள்ளும் வகையில் பொறியியல் படிப்புகளுக்கான பாடத் திட்டத்தில், வாழ்க்கைத் தொழில் கல்விப் பாடம் என்ற புதிய பகுதியை பாரத் பல்கலைக்கழகம் இணைக்க உள்ளது.  பொறியியல் படிப்பின் இரண்டாம் ஆண்டு பாடத் திட்டத்தில், இந்த புதிய பாடம் வழங்கப்பட உள்ளது.  

இதுகுறித்து பாரத் அறிவியல் தொழில்நுட்ப மைய முதல்வர் ஆர். காரி தங்கரத்தினம் திங்கள்கிழமை கூறியது:  

              வாழ்க்கைத் தொழில் கல்விப் பாடம் ஐபிஎம் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது. இதை மாணவர்களுக்கு கற்பிக்கவும், பயிற்சி அளிப்பதற்காகவும், ஐபிஎம் நிறுவனத்துடன் பாரத் பல்கலைக்கழகம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.  போட்டிகள் நிறைந்த இந்த சூழலில், இதுபோன்ற பாடத் திட்டங்கள் மிகவும் அவசியம். குறிப்பாக -டெஸ்ட்டிங் சாஃப்ட்வேர்- துறையில் மாணவர்களுக்கு, ஐபிஎம் நிறுவனம் பயிற்சி அளிக்க உள்ளது என்றார்.



0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior