உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், மே 24, 2011

கடலூர் சிப்காட் டான்பாக் கெமிக்கல் தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து இன்ஜினியர் பலி

முதுநகர் :

          கடலூர் சிப்காட்டில் உள்ள டான்பாக் கெமிக்கல் தொழிற்சாலையில் பா#லர் வெடித்து, இன்ஜினியர் இறந்தார். 

                கடலூர் அடுத்த கூத்தப்பாக்கத்தைச் சேர்ந்தவர் பார்த்தசாரதி (35). கடலூர் சிப்காட்டில் டான்பாக் கெமிக்கல் கம்பெனியில், இன்ஜினியராக புணிபுரிந்து வந்தார். இக்கம்பெனியில் உள்ள பாய்லர்களை ஆண்டுக்கு ஒரு முறை சரி செய்து, காற்று அழுத்தம் சோதிப்பது வழக்கம். கம்பெனியில் இரண்டாவது யூனிட்டில் உள்ள பாய்லர் நேற்று பழுது பார்க்கப்பட்டு, காற்றழுத்தம் பரிசோதிக்கப்பட்டது. அப்போது, காற்றழுத்தம் தாங்காமல் பாய்லர் வெடித்தது. 

             இதில், பார்த்தசாரதி மற்றும் கான்ட்ராக்ட் தொழிலாளியான பச்சையாங்குப்பம் அழகிரி (30) ஆகியோர் படுகாயமடைந்தனர். உடன், இருவரும் மகாத்மா காந்தி மருத்துவக் கல்லூரி மருந்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சைப் பலனின்றி பார்த்தசாரதி இறந்தார். அழகிரி மேல்சிகிச்சைக்காக ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இறந்த இன்ஜினியர் பார்த்தசாரதிக்கு மனைவியும், மூன்று வயது பெண் குழந்தையும் உள்ளனர். கடலூர் முதுநகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.



0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior