உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஜூலை 01, 2011

அண்ணாமலைப் பல்கலை ஆராய்ச்சி திட்டத்திற்கு அமெரிக்கக் குழுவினர் நிதியுதவி


துணை வேந்தர் எம்.ராமநாதனை (வலதுகோடி) சந்தித்த அமெரிக்காவின் மெக்சிகன் பல்கலைக்கழக குழுவினர்.
 
சிதம்பரம்:
 
           பெண் சிசுக்கொலை தடுப்பு தொடர்பான ஆராய்ச்சி திட்டத்துக்கு நிதியுதவி அளிக்க அமெரிக்காவின் மெக்சிகன் பல்கலைக்கழகக் குழுவினர் வியாழக்கிழமை அண்ணாமலைப் பல்கலைக்கழகம் வந்தனர்.
 
             மெக்சிகன் பல்கலைக்கழக அயல்நாட்டு மாணவர்கள் மற்றும் தொழில்துறை தொடர்பு அதிகாரி டான் டட்கிவிக்ஸ் தலைமையிலான குழுவினர் அண்ணாமலைப் பல்கலைக்கழக துணை வேந்தர் எம்.ராமநாதன், பதிவாளர் எம்.ராமநாதன், வேளாண்புல முதல்வர் ஜே.வசந்தகுமார் ஆகியோரை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.இதற்கான ஏற்பாடுகளை அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண் பொருளாதாரத் துறை தலைவர் பேராசிரியர் கே.ஆர்.சுந்தரவரதராஜன் செய்திருந்தார்.
 
           கடந்த ஆண்டு மீனவர் பென்களுக்கான தொழில் முனைவோர் திறன் மேம்பாட்டுக்கான பயிற்சி திட்டத்தை செயல்படுத்த அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துக்கு மெக்சிகன் பல்கலைக்கழகம் நிதியுதவி அளித்தது. இதில் சுனாமியால் பாதிக்கப்பட்ட மீனவர் பெண்கள் பங்கேற்று பயன்பெற்றனர். இதை பாராட்டிய மெக்சிகன் பல்கலைக்கழக குழுவினர், தற்போது இந்த ஆண்டு பெண் சிசுக்கொலை தடுப்பு குறித்து ஆராய்ச்சி மேற்கொள்ள நிதி வழங்க முன்வந்துள்ளது என பேராசிரியர் கே.ஆர்.சுந்தரவரதராஜன் தெரிவித்தார்.
 
 
 
 

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior