உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், செப்டம்பர் 14, 2011

நெல்லிக்குப்பம் தீ விபத்தில் வீடு இழந்தவர்களுக்கு தே.மு.தி.க. சார்பில் நிவாரண உதவி: எம்.எல்.ஏ. சிவக்கொழுந்து வழங்கினார்


 http://mmimages.mmnews.in/Articles/2011/Sep/9682124e-07e2-4cf5-92ff-a5093d8765dd_S_secvpf.gif
நெல்லிக்குப்பம்:

          நெல்லிக்குப்பம் மவுலி அப்துல் ரஹ்மான் வீதியை சேர்ந்த முகமதுகான் என்பவரது வீடு தீப்பிடித்து எரிந்தது. மேலும் சரபுதீன், முகமதுகனி, முகமது அனீபா ஆகியோரின் வீடுகளும் எரிந்து சாம்பலானது. இதில் ரூ.2 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்த சாம்பலானது.
 
               இதுபற்றி தகவல் அறிந்ததும் சிவக்கொழுந்து எம்.எல்.ஏ. தீ விபத்து நடந்த இடத்துக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார். இதன்பின் தே.மு.தி.க. சார்பில் தீவிபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தலா ஆயிரம் ரூபாய், வேட்டி-சேலை, அரிசி ஆகியவைகளை சிவக்கொழுந்து எம்.எல்.ஏ. வழங்கினார். அவருடன் நகர செயலாளர் கஜேந்திரன், நகர பொருளாளர் நாகராஜன், நகர மாணவர் அணி செயலாளர் இசைவேந்தன், த.மு.மு.க. நகர தலைவர் அப்துல் ரஹீம், உசேன், ராஜாஹாஜா மொய்தீன், முகமது அனீப், அப்துல் ரஹ்மான், முகமது ஜிபேல், இஸ்மாயில் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior