உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, நவம்பர் 27, 2009

பஸ் நிறுத்​தத்துக்காக போராடும் பொதுமக்கள்

கட ​லூர்,​ நவ. 26:​

50 ஆண்​டு​க​ளாக இருந்து வந்த பஸ் நிறுத்​தம் அகற்​றப் ​பட்​ட​தால்,​ அதை மீண்​டும் பெறு​வ​தற்​காக நெல்​லிக்​குப்​பம் மக்​கள் நீண்ட போராட்​டத்தை நடத்தி வரு​கி​றார்​கள். ​ ​​ ​

பண்​ருட்டி-​கட​லூர் மார்க்​கத்​தில் நெல்​லிக்​குப்​பத்​தில் போலீஸ் லைன்,​ பிள்​ளை​யார் கோயில்,​ அஞ்​சல் நிலை​யம்,​ ஜான​கி​ரா​மன் நகர் ஆகிய பஸ் நிறுத்​தங்​க​ளும்,​ கட​லூர்-​ பண்​ருட்டி மார்க்​கத்​தில்,​ ஜான​கி​ரா​மன் நகர்,​ அஞ்​சல் நிலை​யம்,​ கடைத்​தெரு,​ ​ காவல்​நி​லை​யம்,​ போலீஸ் லைன் ஆகிய பஸ் நிறுத்​தங்​க​ளும் 50 ஆண்​டு​க​ளுக்​கும் மேலாக இருந்து வந்​துள்​ளன. ​​ ​ ஓராண்​டுக்கு முன் ரூ.1 கோடி செல​வில் நெல்​லிக்​குப்​பத்​தில் பஸ் நிலை​யம் கட்​டப்​பட்டு,​ துணை முதல்​வர் மு.க.ஸ்டா​லின் திறந்து வைத்​தார். ஆனால் கடந்த ஓராண்​டாக பஸ் நிலை​யத்​துக்​குள் எந்த பஸ்​சும் வந்​து​போ​வது இல்லை. இந்த நிலை​யில் செப்​டம்​பர் மாதக் கடை​சி​யில்,​ நெல்​லிக்​குப்​பம் பஸ் நிலை​யத்தை மாவட்ட ஆட்​சி​யர் பெ.சீதா​ரா​மன் பார்​வை​யிட்டு பஸ் நிலை​யத்​துக்​குள் அனைத்து பஸ்​க​ளும் வந்து போக நட​வ​டிக்கை மேற்​கொண்​டார்.​ ​ அக்​டோ​பர் 1-ம் தேதி முதல் அனைத்து பஸ்​க​ளும் பஸ் நிலை​யத்​துக்​குள் வந்​து​போ​கின்​றன. பஸ் நிலை​யத்​துக்கு உள்ளே செல்​லும் வழி​யும்,​ வெளி​யே​றும் வழி​யும் ஒரே இடத்​தில் இருப்​ப​தா​லும்,​ பஸ் நிலைய வாயி​லில் எப்​போ​தும் பஸ்​கள் நிற்​கும் சூழ்​நிலை ஏற்​ப​டு​வ​தா​லும் பண்​ருட்டி-​ கட​லூர் நெடுஞ்​சா​லை​யில் வாக​னப் போக்​கு​வ​ரத்து நெரி​சல் தொடர்ந்து ஏற்​ப​டு​கி​றது.​ ​ இந்த நிலை​யில் பஸ் நிலை​யத்​தில் இருந்து,​ 500 மீட்​டர் தொலை​வில் உள்ள அஞ்​சல் நிலை​யம்,​ கடைத் தெரு ஆகிய இரு பஸ் நிறுத்​தங்​க​ளி​லும் பஸ்​கள் நிற்​கக் கூடாது என்று போலீ​ஸôர் அண்​மை​யில் உத்​த​ர​விட்டு உள்​ள​னர். ​​ ​ அஞ்​சல் நிலைய பஸ் நிறுத்​தத்​தில் இறங்​கித்​தான் 3 பள்​ளி​கள்,​ வங்​கி​கள்,​ எம்.எல்.ஏ. அலு​வ​ல​கம் உள்​ளிட்​ட​வற்​றுக்கு பொது மக்​கள்,​ மாணவ,​ மாண​வி​யர் செல்ல வேண்​டி​யது இருக்​கி​றது. பஸ் நிறுத்​தத்தை எடுத்து விட்​ட​தால் பொது மக்​கள் பஸ் நிலை​யத்​தில் இறங்கி நீண்​ட​தூ​ரம் நடந்தோ,​ ரூ.30க்கு மேல் செல​விட்டு ஆட்டோ ரிக்​ஷாக்​க​ளி​லோ​தான் செல்ல வேண்​டிய கட்​டா​யம் இருப்​ப​தாக பொது​மக்​கள் தெரி​விக்​கி​றார்​கள்.​ ​ பஸ் நிலை​யத்​துக்​குள் பஸ்​க​ளும் பொது மக்​க​ளும் செல்ல வேண்​டும் என்ற கட்​டா​யத்​துக்​காக 50 ஆண்​டு​க​ளாக அனு​ப​வித்த வந்த,​ மக்​க​ளுக்கு வச​தி​யாக இருந்த பஸ் நிறுத்​தங்​களை ஏன் அகற்ற வேண்​டும் என்று கேட்​கி​றார்​கள் நெல்​லிக்​குப்​பம் பொது மக்​கள். மேலும் இரவு 10 மணிக்கு மேல் பஸ் நிலை​யத்​துக்​குள் பஸ்​கள் செல்​வ​தில்லை. எனவே பாது​காப்​பற்ற நிலை ஏற்​பட்டு உள்​ளது என்​றும் பொது மக்​கள் கூறு​கின்​ற​னர்.​ ​ பஸ் நிறுத்​தங்​கள் அகற்​றப்​பட்​ட​தைக் கண்​டித்து நெல்​லிக்​குப்​பம் நகர மக்​கள் இணைந்து உண்​ணா​வி​ர​தம்,​ 3 ஆயி​ரம் வீடு​க​ளில் கருப்​புக் கொடி என பல போராட்​டங்​களை நடத்தி உள்​ள​னர். மேலும் தொடர் போராட்​டங்​களை நடத்​த​வும் திட்​ட​மிட்டு உள்​ள​னர். மக்​கள் பிர​தி​நி​தி​க​ளு​டன் மாவட்ட நிர்​வா​கம் பேச்சு நடத்தி,​ பறிக்​கப்​பட்ட உரி​மையை மீண்​டும் வழங்க வேண்​டும் என்று பொது​மக்​கள் எதிர்​பார்க்​கி​றார்​கள்.

உரி​மை​ பறிப்​பு

இது​கு​றி​தது மார்க்​சிஸ்ட் கம்​யூ​னிஸ்ட் கட்​சி​யின் மாவட்ட செயற்​குழு உறுப்​பி​னர் வி.உத​ய​கு​மார் கூறு​கை​யில்,​ "பஸ் நிலை​யம் செயல்​பட வேண்​டும் என்​ப​தில் கருத்து வேறு​பாடு இல்லை. ஆனால்,​ போஸ்ட் ஆபீஸ் ஸ்டாப்பை எடுத்து விட்​ட​தால் 6 நக​ராட்சி வார்​டு​க​ளைச் சேர்ந்த 20 ஆயி​ரம் மக்​கள் பெரி​தும் பாதிக்​கப்​பட்டு உள்​ள​னர். 3 பள்​ளி​கள்,​ பாரத ஸ்டேட் வங்கி,​ கோயில்​கள் திரு​மண மண்​ட​பங்​கள்,​ எம்.எல்.ஏ. அலு​வ​ல​கம் ஆகி​ய​வற்​றுக்​குச் செல்​வோர் பஸ் நிலை​யம் சென்று வர வேண்​டிய நிலை இருப்​ப​தால் பெரி​தும் அவ​திப்​ப​டு​கி​றார்​கள். 1000 மக்​கள் தொகை கொண்ட கிரா​மத்​துக்கு பஸ் வசதி செய்து கொடுக்​கும் அரசு,​ 20 ஆயி​ரம் மக்​கள் வசிக்​கும் பகு​திக்கு,​ 60 ஆண்​டு​க​ளாக பயன்​ப​டுத்தி வந்த பஸ் நிறுத்​தத்தை அகற்ற வேண்​டிய கட்​டா​யம் என்ன. போஸ்ட் ஆபீஸ் ஸ்டாப்பை எடுக்​கப்​பட்​ட​தால்,​ பஸ் நிலை​யத்​துக்​குள் வணிக வளர்ச்சி எது​வும் ஏற்​ப​டப் போவ​தில்லை. பஸ் நிறுத்​தத்தை அகற்​றி​யது மக்​க​ளின் அடிப்​படை உரி​மை​யைப் பறிப்​ப​தா​கும்' என்​றார் உத​ய​கு​மார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior