உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், நவம்பர் 26, 2009

மணல் லாரி​க​ளால் போக்​கு​வ​ரத்து பாதிப்பு

​ பண்​ருட்டி,​ நவ. 25: ​

மணல் ஏற்றி வந்த லாரி​கள் தென்​பெண்ணை ஆற்​றுப் பாலத்​தில் அணி​வ​குத்து நின்​ற​தால் ,​ சென்னை-​கும்​ப​கோ​ணம் சாலை​யில் புதன்​கி​ழமை போக்​கு​வ​ரத்து நெரி​சல் ஏற்​பட்​ட து.

பண்​ ருட்டி வட்​டம் கண்​ட​ரக்​கோட்​டை​யில் உள்ள தென் பெண்ணை ஆற்​றில் புல​வ​னூர் பகு​தி​யில் மணல் குவாரி நடை​பெற்று வரு​கி​றது. குவா​ரி​யில் மணல் ஏற்ற வரும் லாரி​கள் ஆற்​றுக்​குள் சென்று மணல் ஏற்றி வர பாதை வசதி செய்​ய​வில்லை. இத​னால் மணல் ஏற்ற வந்த லாரி​கள் சென்னை-​கும்​ப​கோ​ணம் தேசிய நெடுஞ்​சா​லை​யில் உள்ள கண்​ட​ரக்​கோட்டை தென் பெண்ணை ஆற்​றுப் பாலத்​தில் அணி​வ​குத்து நின்​றது.நாள் ஒன்​றுக்கு நூற்​றுக்​க​ணக்​கான வாக​னங்​கள் சென்று வரும் முக்​கி​யத்​து​வம் வாழ்ந்த சென்னை-​கும்​ப​கோ​ணம் தேசிய நெடுஞ்​சா​லை​யில் அமைந்​துள்ள தென்​பெண்ணை ஆற்​றுப் பாலத்​தில் மணல் லாரி​கள்,​ அணி​வ​குத்து நின்​ற​தால் மேற்​கண்ட சாலை​யில் ​ போக்​கு​வ​ரத்து தடை​பட்​டது.இத​னால் பள்ளி,​ கல்​லூரி செல்​லும் மாண​வர்​க​ளும்,​வேலைக்கு செல்​ப​வர்​க​ளும்,​ நெடுந்​தூ​ரம் செல்​லும் பய​ணி​க​ளும் பெரி​தும் பாதிப்​ப​டைந்​த​னர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior