உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், நவம்பர் 26, 2009

தேசிய பத்​தி​ரிகை தின போட்டி பரி​ச​ளிப்பு

​ சிதம்​ப​ரம்,​ நவ. 25:​

சிதம்​ப​ரம் அண்​ணா​ம​லைப் பல்​க​லைக்​க​ழக நாட்டு நலப் பணித் திட்​டம் சார்​பில் தேசிய பத்​தி​ரிகை தினத்தை முன்​னிட்டு மாண​வர்​க​ளுக்கு சிறப்பு பேச்​சுப் போட்டி நடத்​தப்​பட்​டது.

இப் போட்​டி​யில் வெற்றி பெற்ற மாண​வர்​க​ளுக்கு பரி​ச​ளிப்பு விழா செவ்​வாய்க்​கி​ழமை நடை​பெற்​றது.துணை​வேந்​தர் டாக்​டர் எம்.ராம​நா​தன்,​ வெற்றி பெற்ற மாணவ,​ மாண​வி​யர்​க​ளுக்கு பரி​சு​களை வழங்​கிப் பாராட்​டி​னார். இவ்​வி​ழா​வில் தமிழ் மற்​றும் மொழி​யி​யல் துறைத் தலை​வர் பழ.முத்​து​வீ​ரப்​பன் தலைமை வகித்​தார். நூல​கத்​துறை தலை​வர் எம்.நாக​ரா​ஜன்,​ சமூ​க​வி​யல் துறைத் தலை​வர் டி.செல்​வ​ராஜ்,​ தோட்​டக்​க​லைத்​துறை தலை​வர் கே.மணி​வண்​ணன் உள்​ளிட்​டோர் வாழ்த்​து​ரை​யாற்​றி​னர்.இதற்​கான ஏற்​பா​டு​களை திட்ட ஒருங்​கி​ணைப்​பா​ளர் டி.ஆர்.ஜெய​ராஜ் செய்​தி​ருந்​தார். மக்​கள் தொடர்பு அதி​காரி எஸ்.செல்​வம் உள்​ளிட்​டோர் விழா​வில் பங்​கேற்​ற​னர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior