உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், நவம்பர் 26, 2009

வீட்டுவசதி பணியாளர் உண்​ணா​வி​ர​தம்

கட ​லூர்,​ நவ.25: ​

தமிழ்​நாடு வட்​டக் கூட்​டு​றவு வீட்​டு​வ​சதி சங்​கங்​க​ளின் பணி​யா​ளர் யூனி​ய​னைச் சேர்ந்த ஊழி​யர்​கள் கட​லூ​ரில் புதன்​கி​ழமை உண்​ணா​வி​ர​தம் இருந்​த​னர். ​​ ​ ​ பிர​தம கூட்​டு​றவு வீட்டு வச​திச் சங்​கங்​க​ளைக் காப்​பாற்ற தமி​ழ​கத்​தின் வீட்​டு​வ​ச​தித் தேவை​களை நிறை​வேற்ற,​ கடன் வழங்க நிதி ஆதா​ரங்​களை ஏற்​ப​டுத்த வேண்​டும். ​ ​ ​​ ​ ​ மத்​திய மாநில அர​சு​க​ளின் வீட்டு வச​தித் திட்​டங்​களை கூட்​டு​றவு வீட்​டு​வ​ச​திச் சங்​கங்​கள் மூலம் செயல்​ப​டுத்த வேண்​டும். பணி​யா​ளர்​க​ளின் நிர்​வா​கச் செல​வு​க​ளுக்கு அரசு நிர்​வாக மானி​யம் வழங்க வேண்​டும்.​ ​ ​ கடன் தள்​ளு​படி அறி​விப்​பால்,​ ஏற்​பட்ட இழப்பை,​ சம்​பந்​தப்​பட்ட பிர​தம சங்​கங்​க​ளுக்கு வழங்க வேண்​டும்,​ பிர​தச் சங்க்ப பணி​யா​ளர்​களை அர​சுப் பணி​யா​ளர்​க​ளாக அறி​விக்க வேண்​டும் என்​பன உள்​ளிட்ட 10 அம்​சக் கோரிக்​கைளை வலி​யு​றுத்தி இந்த உண்​ணா​வி​ர​தம் நடந்​தது. ​​ ​ ​ மாவட்ட ஆட்​சி​யர் அலு​வ​ல​கம் முன் நடந்த இந்த உண்​ணா​வி​ர​தத்​துக்கு சங்​கத்​தின் மாநில இணைப் பொதுச் செய​லா​ளர் ஆர்.ராக​வேந்​தி​ரன் தலைமை தாங்​கி​னார். மண்​ட​லத் தலை​வர் ஏ.கிருஷ்​ண​மூர்த்தி வர​வேற்​றார்.​ ​ ​ உண்​ணா​வி​ர​தத்தை அர​சுப் பணி​யா​ளர் சங்க மாநி​லத் தலை​வர் கு.பால​சுப்​பி​ர​ம​ணி​யன் தொடங்கி வைத்​துப் பேசி​னார்.​ ​ ​ கட​லூர் தொழிற்​சங்​கக் கூட்​ட​மைப்​பின் தலை​வர் ச.சிவ​ரா​மன் உண்​ணா​வி​ர​தத்தை முடித்து வைத்​துப் பேசி​னார். ஜி.மீனாட்​சி​சுந்​த​ரம் நன்றி கூறி​னார். ​

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior