உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், டிசம்பர் 02, 2009

உழ​வர் சந்தை மீண்​டும் இயக்க ஆட்​சி​யர் உத்​த​ரவு

சிதம்ப​ரம்,​ டிச. 1:​ 
 
சிதம்​ப​ரம் அண்ணா கலை​ய​ரங்​கம் வளா​கத்​தில் தொடங்​கப்​பட்ட உழ​வர் சந்தை இயங்​கா​மல் உள்​ளது குறித்து தின​ம​ணி​யில் கடந்த மாதம் 4-ம் தேதி ​ படங்​க​ளு​டன் கட்​டுரை வெளி​யிட்​டி​ருந்​தோம். அதன் எதி​ரொ​லி​யாக கட​லூர் மாவட்ட ஆட்​சி​யர் பெ.சீதா​ரா​மன் உழ​வர் சந்​தையை மீண்​டும் இயக்க உத்​த​ரவு பிறப்​பித்​துள்​ளார்.
 
சி​தம்​ப ​ரம் நக​ரில் அண்ணா கலை​ய​ரங்​கம் வளா​கத்​தில் 2000-ம் ஆண்டு ஆகஸ்டு 9-ம் தேதி வேளாண் விற்​ப​னைத் துறை​யி​ன​ரால் உழ​வர்​சந்தை தொடங்​கப்​பட்​டது. அப்​போ​தைய மத்​திய பெட்​ரோ​லிய இணை அமைச்​ச​ரும்,​ நாடா​ளு​மன்ற உறுப்​பி​ன​ரு​மான ஏ.பொன்​னு​சாமி தலை​மை​யில் தமி​ழக வேளாண் துறை அமைச்​சர் வீர​பாண்டி எஸ்.ஆறு​மு​கம் இந்த உழ​வர் சந்​தையை திறந்து வைத்​தார்.
 
அதே வளா​கத்​தில் ரூ.11 லட்​சம் செல​வில் பொரு​ளீட்டு கிடங்​கும்,​ ரூ.2.75 லட்​சம் செல​வில் உளர்​க​ள​மும் அமைக்க அடிக்​கல் நாட்​டப்​பட்​டது. அடிக்​கல் நாட்​டி​ய​தோடு சரி இன்று வரை கிடங்​கும்,​ உலர்​க​ள​மும் அமைக்​கப்​ப​ட​வில்லை. மொத்​தம் 28 கடை​க​ளு​டன் உழ​வர் சந்தை தொடங்​கப்​பட்டு சில மாதங்​களே இயங்​கி​யது. ஊர் எல்​லை​யில் உள்​ள​தால் பொது​மக்​கள் யாரும் வாங்க வரா​த​தால் வியா​பா​ரி​கள் உழ​வர் சந்​தைக்கு வரு​வதை நிறுத்தி விட்​ட​னர். அன்றி​லி​ருந்து 9 ஆண்​டு​க​ளாக உழ​வர்​சந்தை இயங்​கா​மல் உள்​ளது.÷தற்​போது ஆட்​சி​ய​ரின் கண்​டிப்​பான உத்​த​ர​வின் பேரில் சிதம்​ப​ரம் உழ​வர் சந்​தை​யில் திங்​கள்​கி​ழமை முதல் 5 கடை​கள் அமைக்​கப்​பட்டு புதுப்​பொ​லி​வு​டன் இயங்​கின. மேலும் கூடு​த​லான கடை​களை அமைக்க வேளாண் வணிக துணை இயக்​கு​நர் தன​வேல் உழ​வர் சந்​தையை திங்​கள்​கி​ழமை ஆய்வு மேற்​கொண்​டார். வேளாண் அலு​வ​லர்​கள் சித்ரா,​ அமுதா,​ வேலு,​ கலி​ய​மூர்த்தி உள்​ளிட்​டோர் உட​னி​ருந்​த​னர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior