உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், டிசம்பர் 02, 2009

ஊராட்சி கழிப்​பறை கட்​ட​டத்தை இடிக்க ஆட்​சி​யர் உத்​த​ரவு

சிதம்ப​ரம்,​ டிச. 1:​ 
 
 
சிதம்​ப​ரம் அருகே உள்ள லால்​பு​ரம் ஊராட்​சி​யில் புதி​தாக கட்​டப்​பட்டு வரும் கழிப்​ப​றையை இடிக்க மாவட்ட ஆட்​சி​யர் பெ.சீதா​ரா​மன் உத்​த​ர​விட்​டுள்​ளார்.
 
லால்​பு​ரம் ஊராட்சி சார்​பில் தீர்​மா​னம் நிறை​வேற்​றப்​பட்டு,​ சிதம்​ப​ரத்தை அடுத்த லால்​பேட்டை ஊராட்​சி​யில் வண்​டி​கேட் பகு​தி​யில் பாசி​முத்​தான்​ஓடை,​ சிவ​கா​ம​சுந்​த​ரி​ஓடை இடையே புதிய கழிப்​பறை கட்​ட​டம் கட்​டும் பணி நடை​பெற்று வரு​கி​றது. இந்த கழிப்​பறை கட்​ட​டத்​தால் கரை சேத​மாகி பாசி​முத்​தான்​ஓடை தண்​ணீ​ரும் வீணா​கும் என பாசி​முத்​தான்​ஓடை விவ​சாய சங்​கத் தலை​வர் பி.ரவீந்​தி​ரன் ஆட்​சி​ய​ரி​டம் புகார் தெரி​வித்​தார்.÷அ ​தன்​பே​ரில் மாவட்ட ஆட்​சி​யர் அதி​கா​ரி​க​ளைக் கொண்டு ஆய்வு மேற்​கொண்​ட​தில் பொதுப்​ப​ணித்​துறை உள்​ளிட்ட யாரி​ட​மும் அனு​மதி பெறா​மல் அப்​ப​கு​தி​யில் கழிப்​பறை கட்​டப்​பட்டு வந்​தது தெரி​ய​வந்​தது. மேலும் அந்த கழிப்​ப​றை​யால் பொது​மக்​க​ளுக்கு பாதிப்பு ஏற்​ப​டும் எனக் கருதி அந்​தக் கழிப்​ப​றையை உட​ன​டி​யாக இடித்து அகற்ற பொதுப்​ப​ணித்​துறை அதி​கா​ரி​க​ளுக்கு ஆட்​சி​யர் உத்​த​ரவு பிறப்​பித்​துள்​ளார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior