உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், டிசம்பர் 02, 2009

மார்க்​சிஸ்ட் ஆர்ப்​பாட்​டம்

கட ​லூர்,​ டிச. 1:​ 
 
     வங்​கக் கட​லில் மீன்​பி​டித்​துக் கொண்டு இருந்த கட​லூர் மீன​வர்​கள் மீது,​ இந்​தி​யக் கடற்​ப​டை​யி​னர் தாக்​கு​தல் நடத்​தி​ய​தற்​குக் கண்​ட​னம் தெரி​வித்து,​ மார்க்​சிஸ்ட் கம்​யூ​னிஸ்ட் கட்​சி​யி​னர் கட​லூ​ரில் திங்​கள்​கி​ழமை மாலை ஆர்ப்​பாட்​டம் நடத்​தி​னர். ​
 
 
க​ட​லூர் மீன​வர்​க​ளைத் தாக்​கிய இந்​தி​யக் கடற்​ப​டை​யி​னர் மீது நட​வ​டிக்கை எடுக்க வேண்​டும். கடற்​கரை மேலாண்​மைச் சட்​டத்தை முழு​மை​யாக கைவிட வேண்​டும். ஆழ்​கட​லில் மீன் பிடிக்​கும் உரி​மை​யைப் பறிக்​கக் கூடாது ஆகிய கோரிக்​கை​க​ளுக்​காக இந்த ஆர்ப்​பாட்​டம் நடந்​தது. ​
 
மீன்​பி​டித் தொழி​லா​ளர் சங்க மாவட்​டச் செய​லா​ளர் வைத்தி​லிங்​கம் தலைமை தாங்​கி​னார். சங்க நிர்​வா​கி​கள் சுப்​பு​ரா​யன்,​ சந்​தி​ரன்,​ தங்​க​ராசு,​ தமிழ்​மா​றன் உள்​ளிட்​டோர் முன்​னிலை வகித்​த​னர். ​ ​
 
மார்க்​சிஸ்ட் கம்​யூ​னிஸ்ட் ஒன்​றி​யச் செய​லா​ளர் ஜி.மாத​வன்,​ நக​ரச் செய​லா​ளர் சுப்​பு​ரா​யன்,​ சி.ஐ.டி.யூ. மாவட்​டத் தலை​வர் கருப்​பை​யன்,​ மாவட்​டச் செய​லா​ளர் சுகு​மா​றன்,​ சிறப்​புத் தலை​வர் பாஸ்​க​ரன் மற்​றும் நிர்​வா​கி​கள் ஆள​வந்​தார்,​ கண்​ணன்,​ ​ ஊராட்சி ஒன்​றி​யக்​குழு உறுப்​பி​னர் தட்​சி​ணா​மூர்த்தி உள்​ளிட்ட பலர் பேசி​னர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior