உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், டிசம்பர் 02, 2009

அடிப்படை வசதியின்றி வடலூர் அரசு நூல​கம்

நெய்வேலி, ​ டிச. 1:​ 
 
            வள்​ள​லார் வாழ்ந்த வட​லூ​ரில் அர​சுக் கிளை நூல​கம் போதிய அடிப்​படை வச​தி​க​ளின்றி கடந்த 29 ஆண்​டு​க​ளாக வாட​கைக் கட்​ட​டத்​தில் இயங்கி வரு​வது அப்​ப​குதி புத்​தக விரும்​பி​களை பெரி​தும் கவ​லை​ய​டை​யச் செய்​துள்​ளது.
 
க​ட​லூர்-​விருத்​தா​ச​லம் சாலை மார்க்​கத்​தில் வட​லூர் வள்​ள​லார் தரு​மச்​சாலை பஸ் நிறுத்​தம் அருகே ஒரு வாட​கைக் கட்​ட​டத்​தில் 240 சதுர அடி பரப்​ப​ள​வில் இயங்கி வரு​கி​றது அரசு கிளை நூல​கம்.     இந்த நூல​கத்​தில் சுமார் ரூ.10 லட்​சம் மதிப்​பி​லான 15 ஆயி​ரம் புத்​த​கங்​கள் உள்​ளன.
 
இ ​ரண்டு கடை​கள் வாட​கைக்கு எடுக்​கப்​பட்டு அதில் ஒரு கடை வாச​கர்​கள் படிப்​ப​தற்​கும்,​ மற்​றொரு கடை புத்​த​கங்​கள் வைப்​ப​தற்​கும் பயன்​ப​டுத்​தப்​ப​டு​கி​றது.      இந்த நூல​கத்​தில் கணினி பயன்​பாடு கூட கிடை​யாது.        தொலை​பேசி வச​தி​யும் கிடை​யாது.
 
இந்த நூல​கத்​தில் ஒரே சம​யத்​தில் 10 பேர் மட்​டுமே அமர்ந்து படிக்​க​மு​டி​யும். இத​னால் இந்த நூல​கத்​துக்கு வரும் வாச​கர்​கள் போதிய இட​வ​சதி இல்​லா​த​தால்,​ மந்​தா​ரக்​குப்​பம் மற்​றும் நெய்வேலி நூல​கங்​க​ளுக்​குச் செல்​லும் நிலை ஏற்​பட்​டுள்​ளது. ​÷வள் ​ள​லார் வாழ்ந்த வட​லூர் மாநில அமைச்​சர் எம்.ஆர்.கே.பன்​னீர்​செல்​வத்​தின் முயற்​சி​யால் நாளுக்​கு​நாள் வளர்ச்​சி​ய​டைந்து வரு​கி​றது.     ஆனால் அறி​வை​யும்,​ நல்ல பண்​பு​க​ளை​யும் வளர்க்​கக் கூடிய நூல​கம் கண்​டு​கொள்​ளப்​ப​டா​மல் இருப்​பது வேத​னை​ய​டை​ய​வைக்​கி​றது.÷இ​து​கு​றித்து மாவட்ட மைய நூல​கர் அசோ​கன் கூறி​யது:​        
 
சரி​யான இடம் கிடைக்​கா​த​தால் வட​லூர் நூல​கம் வாட​கைக் கட்​ட​டத்​தில் இயங்கி வரு​கி​றது.       இடம் தேர்வு செய்​து​கொண்​டி​ருக்​கி​றோம்.     
 
வட​லூர் பேரூ​ராட்சி செயல் அலு​வ​ல​ரி​ட​மும் இடம் தொடர்​பாக கோரிக்கை வைத்​துள்​ளோம்.
 
கு​றிஞ்​சிப்​பாடி ஒன்​றி​யக் கல்​விக் குழு உறுப்​பி​னர் சிவக்​கு​மார்,​ நூலக வளர்ச்​சிக்​காக பெரி​தும் உத​வி​வ​ரு​கி​றார்.     இடம் தேர்​வான உடன் ரூ.15 லட்​சம் மதிப்​பில் அனைத்து வச​தி​க​ளு​டன் நூல​கம் செயல்​ப​டும் என்​றார் அசோ​கன்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior