உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, மார்ச் 12, 2010

சுனாமி குடியிருப்பு : ஆர்.டி.ஓ., விசாரணை

பரங்கிப்பேட்டை: 

               பரங்கிப்பேட்டையில் சுனாமியால் பாதித்தவர்களுக்கு குடியிருப்புகள் கட்டித்தராதது குறித்து ஆர்.டி.ஓ., விசாரணை நடத்துகிறார். சுனாமியில் பாதித்த பகுதியை சேர்ந்தவர்களுக்கு அரசு மற்றும் தொண்டு நிறுவனங்கள் குடியிருப்புகள் கட்டிக் கொடுத்தனர். ஆனால் சுனாமியில் முழுமையாக பாதித்த பரங்கிப்பேட்டை ஆரியநாட்டு கிழக்கு தெரு பகுதி மக்களுக்கு குடியிருப்புகள் கட்டித் தரப்படவில்லை. இதுகுறித்து பரங்கிப்பேட்டை பேரூராட்சி துணை சேர்மன் செழியன், முதல்வருக்கு மனு அனுப்பி இருந்தார். அதனைத் தொடர்ந்து முதல்வரின் தனிபிரிவில் இருந்து சிதம்பரம் ஆர்.டி.ஓ., விசாரணை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. வி.ஏ.ஓ., மற்றும்  துணை சேர்மன் செழியன் ஆகியோரிடம் விசாரணை நடத்த தபால் அனுப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior