உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, மார்ச் 12, 2010

நெல்லிக்குப்பத்தில் நகராட்சியில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி

நெல்லிக்குப்பம்:

                 நெல்லிக்குப்பத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நேற்று நடந்தது. நெல்லிக்குப்பம் நகராட்சி எல்லையில் கடலூர் பண்ருட்டி சாலை முழுவதும் ஆக்கிரமிப்புகள் நிறைந்துள்ளன. இதனால் போக்குவரத்து இடையூறும், விபத்துகளும் நடக்கிறது. பஸ் நிலையத்தின் உள்ளே பஸ்கள் சென்று வர சிரமமாக உள்ளதால் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. 
 
                   கலெக்டர் சீத்தாராமன் உத்தரவின் பேரில் முக்கிய சாலையில் சர்வேயர் மூலம் அளக்கும் பணி நடந்தது. ஆக்கிரமிப்புகளை கடைக்காரர்களே அகற்றி கொள்ள வேண்டுமென தண்டோரா போட்டனர். பெரும்பான்மையானவர்கள் தாங்களாகவே ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொண்டனர். பொக்லைன் இயந்திரம் மூலம் நேற்று ஆக்ரமிப்புகளை அகற்றப்பட்டன. கட்டட ஆய்வாளர் குமரவேல் தலைமையில் நகராட்சி ஊழியர்கள் பணியாற்றினர். போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior