உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, மார்ச் 12, 2010

சட்ட உதவி ஆலோசனை மையம் திறப்பு விழா

கடலூர்: 

                  கடலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு மற்றும் மாதர் நல தொண்டு நிறுவனம் சார்பில் உலக மகளிர் தின விழா, சட்ட உதவி ஆலோசனை மையம் திறப்பு விழா பாதிரிக்குப் பத்தில் நடந்தது.

                     தொழிலாளர் நல நீதிமன்ற நீதிபதி வணங்காமுடி தலைமை தாங்கி சட்ட உதவி ஆலோசனை மையத்தை திறந்து வைத்து பேசினார். மாதர் நல தொண்டு நிறுவன நிர் வாக இயக்குனர் ராஜேந்திரன் வரவேற்றார். மாவட்ட தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி ஜாகீர் ஹூசைன், முதன்மை சார்பு நீதிபதி சண்முகநாதன் ஆகியோர்  முன் னிலை வகித்தனர்.நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை உரிமையியல் நீதிபதி நர்கீஸ் கரீம், கடலூர் மாஜிஸ்திரேட்டுகள், சுதா, ரமேஷ், அரசு சிறப்பு வக்கீல் வனராசு, வக்கீல் குணவதி ஆகியோர் பேசினர். மகளிர் குழுக்களின் பணிகள் குறித்து  தொண்டு நிறுவன திட்ட ஒருங்கிணைப் பாளர் ஸ்ரீமதி பேசினார்.நிகழ்ச்சியில் மகளிர் சுய உதவிக்குழுவினர் 18 பேருக்கு கறவை மாடு வாங்குவதற்காக தலா 15 ஆயிரமும், நிஷா புயலில் பதித்த குழுவினர் 16 பேருக்கு இன்சூரன்ஸ் தொகை  வழங்கப்பட்டது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior