உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், அக்டோபர் 13, 2010

100 மில்லி கிராம் தங்கத்தில் தாலி:சிதம்பரம் பொற்கொல்லர் சாதனை



சிதம்பரம்:

                    சிதம்பரத்தைச் சேர்ந்த பொற்கொல்லர், 100 மில்லி கிராம் தங்கத்தில் மிகச்சிறிய தாலி செய்து சாதனை படைத்துள்ளார். கடலூர் மாவட்டம், சிதம்பரம் இளமையாக்கினார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஜெயபால் மகன் முத்துக்குமரன் (29); பொற்கொல்லர். இவர் கடந்த 15 ஆண்டுகளாக தந்தையுடன் நகை செய்து வருகிறார். சமீப காலமாக குறைந்த எடை தங்கத்தில் நகை, பல்வேறு பொருட்கள் செய்து பலரது பாராட்டை பெற்றுள்ளார்.

                       ஒரு குண்டுமணி (120 மி.கி.,) தங்கத்தில் சிறிய தாலி செய்ய முயற்சித்தார். ஆனால் 150 மில்லி கிராமைத் தொட்டது. இருப்பினும் இரண்டு நாள் விடாமல் முயற்சி செய்து தற்போது 100 மி.கி., எடையில் மிக நுணுக்கமாகவும், நேர்த்தியுடனும் தாலி செய்து திறமையை நிரூபித்துள்ளார்.

                   இதே போல், 240 மி.கி., சீலிங்பேன், 40 மி.கி., மோதிரம், தாலி பொட்டு, 180 மி.கி., இரண்டு தாலி குண்டு, 150 மி.கி., மண்வெட்டி, 20 மி.கி., கைவிசிறி, 40 மி.கி., கத்தி உள்ளிட்ட பொருட்கள் செய்து அசத்தியுள்ளார். 150 கிராம் வெள்ளி பயன்படுத்தி இரண்டு அங்குல உயரம் கொண்ட கைபம்பு செய்து, அதில் வாஷர் பொருத்தி, இயக்கினால் தண்ணீர் வரும் அளவிற்கு நேர்த்தியாக செய்து முடித்துள்ளார். மேலும் பல சாதனைகள் செய்ய முயன்று வருவதாக முத்துக்குமரன் தெரிவித்தார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior