உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், அக்டோபர் 13, 2010

சிதம்பரம் நகரில் பன்றிக்காய்ச்சல் தடுப்பூசி தட்டுப்பாடு

சிதம்பரம்:

                   சிதம்பரம் நகரில் மர்மக் காய்ச்சல் ஏற்பட்டு அதிகம் பேர் தனியார் மற்றும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் சிதம்பரம் பகுதியில் மெட்ராஸ்-ஐ நோயும் அதிவேகமாக பரவி வருகிறது. இதுகுறித்து மாவட்ட சுகாதாரத்துறை எவ்வித தடுப்பு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

                மர்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் மத்தியில் பன்றிக்காய்ச்சல் அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பன்றிக்காய்ச்சல் தடுப்பூசி போட்டுக்கொள்ள நினைக்கும் பொதுமக்களுக்கு தடுப்பூசி கிடைக்காததால் பெரும் கவலைக்குள்ளாகியுள்ளனர். சிதம்பரம் காமராஜ் அரசு மருத்துவமனைக்கு சென்று பொதுமக்கள் பன்றிக்காய்ச்சல் தடுப்பூசி போடப்படுமா என கேட்டால், "கடலூரில் உள்ள தலைமை அரசு மருத்துவமனைக்கு சென்றுதான் ஊசி போட்டுக் கொள்ள வேண்டும்' என அங்குள்ள மருத்துவர்கள் தெரிவித்ததாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

                    சிதம்பரம் பகுதியில் ஒருசில தனியார் மருத்துவமனைகளில் | 600-க்கு பன்றிக்காய்ச்சல் தடுப்பூசி போடப்படுவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். ஏழை, எளிய மக்கள் கடலூர் சென்று தடுப்பூசி போட்டுக்கொள்ள முடியாது. எனவே சிதம்பரம் அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பன்றிக்காயச்சல் தடுப்பூசி போட மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அக்னி சிறகுகள் இயக்கத் தலைவர் ஆ.குபேரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior