உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், அக்டோபர் 13, 2010

தேசிய அளவிலான ஜே.ஆர்.சி., முகாமில் குறிஞ்சிப்பாடி வேலாயுதம் பள்ளி சாதனை

கடலூர் : 

             பஞ்சாப் மாநிலம் மொகாலியில் நடந்த தேசிய அளவிலான ஜே.ஆர்.சி.,முகாமில் குறிஞ்சிப்பாடி ச.கு.வேலாயுதம் மேல்நிலைப் பள்ளி சாதனை படைத்துள்ளது.
 
                   பஞ்சாப் மொகாலியில் நடந்த தேசிய அளவிலான இளைஞர் கலாசார பரிமாற்றத்திட்டம் முகாமில் குறிஞ்சிப்பாடி பள்ளி மாணவர்கள் தமிழகத்தின் ஒரே பள்ளியாக பங்கேற்றனர். முகாமில் நடந்த போட்டிகளில் தமிழகத்தின் சார்பில் பங்கேற்ற குறிஞ்சிப்பாடி ச.கு.வேலாயுதம் மேல்நிலைப் பள்ளி அணியினர் நாட்டுப்புறப்பாடல், பரதநாட்டியம், குழு கலந்துரையாடல் ஆகியவற்றில் முதலிடத்தை பிடித்தனர். மேலும் குழுப்பாடல், குழுநடனம், மாணவிகள் விளையாட்டு போட்டி ஆகியவற்றில் இரண்டாமிடத்தையும், மாணவர்கள விளையாட்டுப் போட்டியில் மூன்றாம் இடத்தையும் பிடித்தனர்.

                    முகாமில் ஒட்டுமொத்த வெற்றிபுள்ளிகள் பட்டியலில் தமிழகம் இரண்டாமிடத்தைப் பெற்றது. வெற்றி பெற்ற குறிஞ்சிப்பாடி ச.கு.வேலாயுதம் மேல்நிலைப் பள்ளி ஜே.ஆர்.சி., அணியினரை கன்வீனர் கோவிந்தராஜ், பள்ளி செயலாளர் செல்வராஜ், பள்ளிக்குழுத் தலைவர் பிரேமாசெல்வராஜ், தலைமை ஆசிரியர் நமச்சிவாயம் பாராட்டினர். மேலும் வெற்றி பெற்ற மாணவ,மாணவிகள், ஆலோசகர் குமார், கார்த்திகேயன், பியூலாஜெயந்தி, பயிற்சி அளித்த ஆசிரியர்கள் நவஜோதி, கவிதா மற்றும் தலைமை ஆசிரியர் நமச்சிவாயம் ஆகியோரை முதன்மை கல்வி அலுவலர் பாராட்டி பரிசுகளை வழங்கினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior