உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், அக்டோபர் 13, 2010

வள்ளலார் வாழ்ந்த இடத்தை நாட்டுடைமையாக்க நடவடிக்கை


 
                  ராமலிங்க வள்ளலார் வாழ்ந்த இல்லத்தை நாட்டுடைமையாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று தமிழ் வளர்ச்சித் துறை கூறியுள்ளது.
 
இது குறித்து புதுச்சேரியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற துணை ஆட்சியர் பா. கமலக்கண்ணன் வெளியிட்ட அறிக்கை:
 
                  வடலூர் வள்ளலார் ராமலிங்கப் பெருமான், சென்னை ஏழு கிணறு வீராசாமிப் பிள்ளைத் தெருவில் புதிய கதவு எண் 31 என்ற வீட்டில் தன்னுடைய 2 வயது முதல் 32 ஆண்டுகள் வாழ்ந்து கடுந்தவம் புரிந்து முக்தி என்ற முன்னறு மெய்ஞான சாதனை நிலையை அடைந்தார். இந்த இல்லத்தில் திருவருட்பாவின் பெரும்பாலான பாடல்களை அவர் எழுதினார். பின்னர் கருங்குழியில் 9 ஆண்டுகளும், வடலூரில் 3 ஆண்டுகளும், மேட்டுக்குப்பத்தில் 3 ஆண்டுகளும் தங்கியிருந்தார்.
 
                   சென்னை வீட்டிலிருந்த திண்ணையில் ராமலிங்கர் படுத்துறங்குது வழக்கம். அந்த இடத்துக்கு சிவபெருமான் பல நாள்கள் வந்ததாகவும், கீழே விழாமல் தாங்கிப் பிடித்ததாகவும் திருவருட்பாவில் குறிப்பிட்டுள்ளார்.மேலும் இவர் பசியோடு உறங்கிய ஒரு நாள் இரவில், வடிவுடையம்மனே அங்கு வந்து அவரை எழுப்பி உணவளித்ததாகவும் திருவருட்பாவில் குறிப்பிட்டுள்ளார். அந்த இல்லம் தற்போது தனியாரிடம் இருப்பதால் திண்ணை அகற்றப்பட்டு கழிப்பறை கட்டப்பட்டுள்ளது. 
 
                       இதை நான் எழுதி, வானதி பதிப்பகம் வெளியிட்ட "அருட்பெருஞ்சோதி ஞானச் சித்தர்' என்ற நூலில் முதல் முதலாகக் குறிப்பிட்டேன்.கோவையில் நடைபெற்ற தமிழ்ச் செம்மொழி மாநாட்டின்போது என் நண்பர் இராம. அனகானந்தன் மூலம் இது பற்றிய மனு ஒன்றை முதல்வரிடம் கொடுக்கப்பட்டது. அதன் மீது தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் பதில் அளித்துள்ளார். அதில் ராமலிங்க வள்ளலார் இல்லத்தை நாட்டுடமையாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது என்றார் கமலக்கண்ணன்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior