உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், அக்டோபர் 13, 2010

கடலூரில் ஓராண்டாகக் கட்டப்படும் பாலம்!

கடலூர்:

                 கடலூரில் ஓராண்டாகக் கட்டப்பட்டு வரும் பாலத்தால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது.  

                  கேப்பர் மலையில் ஆண்கள், பெண்கள் மத்திய சிறைச் சாலைகள், கடலூர் நகராட்சியின் குடிநீரேற்று நிலையங்கள், துணை மின்நிலைய அலுவலகம், மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம், வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் மற்றும் 20-க்கும் மேற்பட்ட மலை கிராமங்களை கடலூர் நகருடன் இணைக்கும் ஒரே நெடுஞ்சாலை, வண்டிப்பாளையம் சாலை ஆகும். பாதாளச் சாக்கடைத் திட்டத்தால் தோண்டப்பட்டு ஓராண்டுக்கும் மேலாக இச்சாலை சிதைந்து கிடந்தது. 2 மாதங்களுக்கு முன்புதான் தார்தளம் அமைத்து சீரமைக்கப்பட்டது. 

               அதுவரை இச்சாலையில் ஊத்துக்காட்டம்மன் கோயில் அருகே பாலத்துக்காக சாலை தோண்டப்பட்டு, வேலை நடந்து வந்தது. சாலை சீரமைக்கப்பட்டதும் பாலம் கட்டும் பணியை மீண்டும் தொடங்கி உள்ளனர். பாதாளச் சாக்கடைத் திட்டப் பணிகள் நடைபெற்ற போதே பாலம் கட்டும் பணியை முடித்திருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு செய்யாமல் சாலை செப்பனிடப்பட்ட பிறகு, சாலையைத் தோண்டி மீண்டும் பாலம் அமைக்கும் பணியை தொடங்கி இருக்கிறார்கள் நெடுஞ்சாலைத் துறையினர்.

                 சாலையில் சரிபாதி அகலத்துக்கு பாலத்துக்கான தளம் முடிக்கப்பட்ட பிறகு, அதன் அருகே சாலையைத் தோண்டிப் போட்டதால், போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. ஆட்டோக்களில் செல்வோர் அப்பகுதிக்கு வந்ததும், அவர்களே ஆட்டோக்களைத் தள்ளி விடவேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. மாணவர்களுக்கும் இதே நிலைதான். இரு சக்கர வாகனங்களில் செல்வோரும் பெரிதும் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள். 

                        இச்சாலையில் சற்று தொலைவில் ரயில்வே மேம்பாலம் தொடங்கும் இடத்தில் வேலை நடக்கிறது மாற்றுவழியில் செல்லவும் என்ற அறிவிப்பு மட்டும் உள்ளது. ஆனால் மாற்றுவழி எங்கும் காணோம். கடலூரில் பாதாளச் சாக்கடைக்காகவும், பாலம் கட்டும் பணிக்காகவும், போக்குவரத்து ஸ்தம்பிக்கும் அளவுக்கு சாலைகளைத் தோண்டுகிறார்கள். ஆனால் மாற்றுவழி பற்றி அதிகாரிகளுக்கு எந்த சிந்தனையும் எழுவதில்லை மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior