உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, நவம்பர் 13, 2010

கடலூரில் துணிகரம்: டாஸ்மாக் கடையில் கொள்ளை

கடலூர்:
 
                 கடலூர் முதுநகர் அன்னவள்ளி மெயின்ரோடு பகுதியில் டாஸ்மாக் மதுபான கடை உள்ளது.
நேற்று அதிகாலை சுமார் 3 மணி அளவில் அந்த கடையில் சத்தம் கேட்டது. இதனைக் கேட்டு திடுக்கிட்ட அதே பகுதியை சேர்ந்த டீக்கடை உரிமையாளர் மோகன் சந்தேகமடைந்து அபாய குரல் எழுப்பியுள்ளார். உடனே 2 மர்ம மனிதர்கள் மோகனை நோக்கி கற்களை வீசிவிட்டு இருளில் மறைந்து தப்பியோடி விட்டனர்.

                   மோகனின் அலறல் சத்தம் கேட்டு திரண்ட அந்த பகுதி பொதுமக்கள் டாஸ்மாக் கடைக்கு சென்று பார்த்த போது, அந்த கடையில் கொள்ளை நடந்திருப்பது தெரியவந்தது. அவர்கள் கொள்ளையர்களை பிடிக்க முயற்சித்தும் பலனளிக்கவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில் கடலூர் முதுநகர் போலீசார் அந்த பகுதிக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர்.

                      டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து 45 குவாட்டர் மதுபாட்டில்கள் மற்றும் 6 பீர்பாட்டில்களை கொள்ளையர்கள் சுருட்டிக்கொண்டு சென்றிருப்பது புலனாகியது. கொள்ளை போன மதுபாட்டில்களின் மதிப்பு ரூ.4 ஆயிரம் ஆகும். போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை வலைவீசி தேடிவருகின்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior