உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், டிசம்பர் 02, 2010

தேவனாம்பட்டினம் சில்வர் பீச் புறக்காவல் நிலையம் அழகுப்படுத்தும் பணி

கடலூர் : 

            தேவனாம்பட்டினம் சில்வர் பீச் புறக்காவல் நிலையம் அழகுப்படுத்தும் பணி நடந்து வருகிறது. கடலூர் தேவனாம்பட்டினம் சில்வர் பீச் வளாகத்தில் புறக்காவல் நிலையம் இயங்கி வந்தது. 

                  கடந்த 2004ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி ஆழிப்பேரலையின் போது, இந்த புறக்காவல் நிலையம் முற்றிலுமாக சேதமடைந்தது. பின், அதே இடத்தில் புறக்காவல் நிலையம் புதியதாக அமைக்கும் பணி முடிவடைந்து, மீண்டும் செயல்படத் துவங்கின. இதையடுத்து புறக்காவல் நிலையத்தை அழகுப்படுத்த எஸ்.பி., அஷ்வின் கோட்னீஸ் முயற்சி மேற்கொண்டார். இதன் ஒரு பகுதியாக காவல் நிலைய வளாகத்தில் புற்கள் பதிக்கும் பணி நடந்து வருகிறது. மேலும், நுழைவு வாயிலில் இரண்டு பீரங்கிகள் அமைக்கப்பட்டு, அழகுப்படுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior