உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், டிசம்பர் 02, 2010

மழைநீரில் ஒழுகும் பண்ருட்டி சப் கோர்ட் வக்கீல்கள் ஊழியர்கள் அவதி

பண்ருட்டி : 

              பண்ருட்டி சப் கோர்ட் மற்றும் முன்சீப் கோர்ட் கட்டடத்தில் தொடர் மழை காரணமாக கட்டடத்திற்குள் நீர் கசிவதால் பணிகள் பாதித்துள்ளது. 

               பண்ருட்டியில் சப் கோர்ட் ஹால்,  மாவட்ட முன்சீப் கோர்ட் ஹால் மற்றும் ஆவண காப்பகம், அலுவலக ஊழியர்கள் பணிபுரியும் கட்டடம், வக்கீல்கள் சங்க அலுவலக கட்டடம் ஆகியவை பகுதியில் உள்ள ஒடுகளில் இருந்து மழைநீர் தொடர்ந்து கசிந்து வருகிறது. கடந்த 1954ம் ஆண்டு கட்டப்பட்ட இக்கட்டடத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் முறையாக பராமரிக்காததால் நீதிமன்ற ஊழியர்கள், வக்கீல்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior