உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஜனவரி 28, 2011

கடலூர் மாவட்டத்தில் படித்து வேலை தேடும் இளைஞர்கள்: சுய தொழில் தொடங்க கலெக்டர் அழைப்பு

கடலூர்:

         படித்து வேலை தேடும் இளைஞர்கள் கடன் பெற்று சுயமாக தொழில் தொடங்க கலெக்டர் அழைப்பு விடுத்துள்ளார்.

கலெக்டர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

           படித்து வேலைதேடும் இளைஞர்கள் சுயமாக தொழில் தொடங்கி வேலை வாய்ப்பினை பெறும் வகையில் தமிழக அரசால் புதிதாக அறிவிக்கப்பட்டு தொழில் மையங்கள் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறைந்த பட்ச கல்வித் தகுதி 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குறைந்த பட்ச வயது 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். அதிகபட்சம் பொதுபிரிவினர் 35 வயதுக்குள்ளும், இதர பிரிவினர் 45 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும். 

          குடும்ப ஆண்டு வருமானம் 1.50 லட்சம் ரூபாய்க்குள் இருக்க வேண்டும்.உற்பத்தி தொடர்பான தொழில்களுக்கு 5 லட்ச ரூபாயும், சேவை தொடர்பான தொழில்களுக்கு 3 லட்ச ரூபாயும், வியாபாரம் தொடர்பான தொழில்களுக்கு ஒரு லட்சமும் கடன் தொகையாக வழங்கப்படுகிறது.இதில் திட்ட அறிக்கையில் 10 சதவீதம் தொகையினை பொதுப் பிரிவினர் விளிம்புத் தொகையாக செலுத்த வேண்டும். 

            திட்ட மதிப்பீட்டில் 15 சதவீதம் மானியமாக வழங்கப்படுகிறது.விண்ணப்பம் மாவட்ட தொழில் மையம் மூலம் பெற்று பூர்த்தி செய்து இரட்டை நகலில் திட்ட அறிக்கை, கல்விச்சான்று, இருப்பிடச்சான்று, சாதிச்சான்று ஆகியவற்றுடன் மாவட்ட தொழில் மையம் அலுவலகத்தில் நேரடியாகவோ, அல்லது தபால் மூலமாகவோ அனுப்பலாம். படித்த வேலைதேடும் இளைஞர்கள் மேற்குறிப்பிட்டுள்ள திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து பயனடையலாம்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior