உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், மார்ச் 15, 2011

ரூ.13 கோடியில் கடலூர் கெடிலம் நதிக்கரை சீரமைப்புத் திட்டம்

கடலூர்:

             கடலூரில் கெடிலம் நதிக்கு இருபுறமும் ரூ. 13.75 கோடியில், கரைகளை சீரமைக்கும் திட்டம் நிறைவேற்றப்பட்டு வருகிறது.

             கடலூர் மாவட்டத்தை இயற்கை இடர்பாடுகளில் இருந்து காப்பாற்ற, கெடிலம் ஆறு, பெண்ணையாறு, மணிமுத்தாறு, வெள்ளாறு, பரவனாறு ஆகியற்றின் கரைகளை பலப்படுத்தும் திட்டம் உலக வங்கி நிதி உதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ரூ. 232 கோடியில் இத்திட்டம் நிறைவேற்றப்பட்டு வருகிறது. இதில் ரூ. 13.75 கோடியில் கடலூர் கெடிலம் ஆற்றங்கரைகள் பலப்படுத்தும் திட்டம் அண்மையில் தொடங்கப்பட்டு உள்ளது.

                     இத்திட்டத்தில் கெடிலம் ஆற்றில் திருவந்திபுரம் முதல், கடலூர் வழியாகத் தேவனாம்பட்டினம் வரை, இரு கரைகளும் பலப்படுத்தப்பட்டு வருகிறது. கரைகள் இல்லாத பகுதிகளில் புதிதாகக் கரை அமைக்கப்படுகிறது. கரைகள் 3.5 மீட்டர் உயரம், 5 மீட்டர் அகலம் கொண்டதாக அமைக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. கடந்த 40 ஆண்டுகளில் இத்தகைய பணி கடலூரில் நடைபெற்றது இல்லை என்று கூறப்படுகிறது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior