உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், மார்ச் 15, 2011

கடலூர் மாவட்டத்தில் வாக்காளர் அடையாள அட்டைகள் வழங்கும் 2 நாள் சிறப்பு முகாம்

கடலூர்:

             கடலூர் மாவட்டத்தில் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம், சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நடந்தது. நகராட்சி அவலுவலகங்கள். ஊராட்சி ஒன்றிய அலவலகங்கள் மற்றும் கிராம நிர்வாக அலுவலகங்களில் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன.

                  கடலூர் நகராட்சி அலுவலகத்திலும் இந்த சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. ஏற்கெனவே  1-7-2010, 15-9-2010, 10-1-2011 ஆகிய தேதிகளில் வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டில்களில் புதிதாக பெயர் சேர்க்கப்பட்டு இருப்பவர்களுக்கு மட்டும், புகைப்படம் எடுக்கப்பட்டு இருந்தால், இந்த முகாமில் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன. ஆனால் அண்மையில் வாக்காளர் பட்டியலில் பெயர்களைச் சேர்க்க பதிவு செய்து கொண்ட பலரும், இந்த முகாமுக்கு வந்து அடையாள அட்டைகளைக் கோரியதால் பெரிதும் சலசலப்பு ஏற்பட்டது.

                 அறிவிக்கப்பட்ட காலத்தில் பெயர்களை சேர்க்காமல் இருந்து விட்டு, கடைசி நேரத்தில் பெயர்களை கொடுத்து உடனேயே அடையாள அட்டைகள் கிடைக்கும் என்று நம்பி வந்த பலர் ஏமாற்றம் அடைந்தனர். எனவே வாக்காளர் பட்டியலில் பெயர்களைச் சேர்க்க வேண்டிய நபர்கள், இன்னும் அதிகமாக இருப்பதை எடுத்துக் காட்டுவதாகவே முகாம் அமைந்து இருந்தது. போதிய விழிப்புணர்வற்று இருப்பதால் பலர், தங்களது வாக்களிக்கும் உரிமையை இழந்து விடுகிறார்கள் என்பதுதான் உண்மை.

                 மேலும் இந்த முகாமில் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டைகளில், அச்சுப் பிழைகள் அதிகமாக இருந்ததாக வாக்காளர்கள் பலர் தெரிவித்தனர். பலருடைய பெயர்கள், தந்தை பெயர் உள்ளிட்டவை தவறாக அச்சிடப்பட்டு இருப்பதாகவும் வாக்காளர்கள் தெரிவித்தனர். இப்பிழைகளால் வாக்குப் பதிவின்போது, வாக்களிப்பதில் பிரச்னைகள் ஏற்பட்டு, வாக்களிக்கும் உரிமையை இழக்க நேரிடுமோ? என்ற அச்சம் அவர்களிடம் எழுந்துள்ளது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior