உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், மார்ச் 15, 2011

பெண் கல்வியால் நாட்டின் வளங்கள் பெருகும்: அண்ணாமலைப் பல்கலைக்கழகத் துணை வேந்தர் டாக்டர் எம்.ராமநாதன்

கடலூர்:

            பெண்களுக்கு அளிக்கப்படும் கல்வியால் நாட்டின் வளம் பெருகும் என்று அண்ணாமலைப் பல்கலைக்கழகத் துணை வேந்தர் டாக்டர் எம்.ராமநாதன் தெரிவித்தார். 

             கடலூர் புனித வளனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின், 17-வது பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடந்தது. 

விழாவில் மாணவ, மாணவிகள் 709 பேருக்கு பட்டங்களை வழங்கி துணைவேந்தர் ராமநாதன் பேசியது: 

          பெண்களுக்கு அளிக்கப்படும் கல்வி மூலம் நாட்டின் வளத்தைப் பெருக்க முடியும். நாம் நமது தகுதி என்ன என்பதைக் கண்டறிந்து செயல்படுவதன் மூலம் பல வெற்றிகளைப் பெறமுடியும். மாணவர்கள் விளக்குகளைப் போன்றவர்கள். ஒரு விளக்கின் மூலம் மற்றொரு விளக்கை ஏற்ற முடியும். 

               பெண்களுக்கு அளிக்கப்படும் கல்வி, அவர்களுக்குத் தன்னம்பிக்கையை ஏற்படுத்துகிறது. கல்வியால் மட்டுமே சமுதாயத்தை உயர்த்த முடியும் என்றார் துணை வேந்தர். பல்கலைக்கழக அளவில் சிறப்பு மதிப்பெண் பெற்ற 22 மாணவ, மாணவியர் கௌரவிக்கப் பட்டனர். விழாவுக்கு கல்லூரி முதல்வர் ஐ.ரட்சகர் அடிகள் தலைமைத் தாங்கினார். புனித வளனார் மேல்நிலைப் பள்ளி முதல்வர் ஆக்னல் அடிகள், விடுதிக் காப்பாளர் சூசைக்கண்ணு அடிகள், கல்லூரி துணை முதல்வர் அருமைச் செல்வம், ஆங்கிலத் துறைத் தலைவர் ஜெயந்தி ரவிச்சந்திரன், தேர்வுத்துறை இயக்குநர் பெரியநாயக சாமி, கல்லூரி மேலாளர் அந்தோனி ராஜ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior