உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, மார்ச் 19, 2011

பண்ருட்டி தொகுதி திமுக வேட்பாளர் சபா.ராஜேந்திரன் பிரசாரம் தொடக்கம்

பண்ருட்டி:

          பண்ருட்டி தொகுதி திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சபா.ராஜேந்திரன், திமுக, கூட்டணிக் கட்சி முக்கிய பிரமுகர்களை சந்தித்து ஆதரவு திரட்டும் பணியை வெள்ளிக்கிழமை மேற்கொண்டார்.

               பண்ருட்டி தொகுதி திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சபா.ராஜேந்திரன் 2006-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில் நெல்லிக்குப்பம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.கடலூர் மாவட்டச் செயலரும், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சருமான எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்துடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இரு பிரிவினராக செயல்பட்டு வந்தனர்.தொகுதி மறுசீரமைப்புக் காரணமாக நெல்லிக்குப்பம் தொகுதி பண்ருட்டி தொகுதியுடன் சேர்த்தும், பண்ருட்டி தொகுதியில் இருந்த 30 பஞ்சாயத்துக்களை புதிதாக உருவான நெய்வேலி தொகுதியில் சேர்க்கப்பட்டது.

                தற்போது நடைபெற உள்ள தேர்தலில் பண்ருட்டி தொகுதியில் சபா.ராஜேந்திரனும், மாவட்ட அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்களான டாக்டர் நந்தகோபாலகிருஷ்ணன், அண்ணாகிராம ஒன்றியச் செயலர் வி.கே.வெங்கட்ராமன் ஆகியோர் விருப்ப மனு செய்தனர். இதில் கடும் போட்டிகளுக்கு இடையே சபா.ராஜேந்திரனுக்கு வாய்ப்பு கிடைத்ததாக அக்கட்சியை சேர்ந்தவர்கள் கூறினர். இந்நிலையில் வெள்ளிக்கிழமை பண்ருட்டி வந்த திமுக வேட்பாளர் சபா.இராஜேந்திரன் அண்ணா, காமராஜர், அம்பேத்கர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்னர் கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior