உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், மார்ச் 23, 2011

கடலூர் வழியாக திருவாரூர் செல்கிறார் முதல் அமைச்சர் கருணாநிதி

             
              தி.மு.க. கூட்டணி தேர்தல் பிரசாரத்தை முதல் அமைச்சர் கருணாநிதி திருவாரூரில் புதன்கிழமை (23.03.2011) மாலை தொடங்கி வைக்கிறார். இதற்காக திருவாரூர் தெற்கு வீதியில் பிரமாண்ட பொதுக்கூட்டத்திற்கு    ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

             தேர்தல் பிரசாரத்தை தொடங்குவதற்காக முதல் அமைச்சர் கருணாநிதி புதன்கிழமை காலை 6.30 மணிக்கு சென்னையிலிருந்து கார் மூலம் புறப்பட்டு அவர் புதுச்சேரி, கடலூர் வழியாக திருவாரூர் செல்கிறார். மாலை 6 மணிக்கு தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் தொடங்குகிறது. அதில் முதல் அமைச்சர் கருணாநிதி கலந்து கொண்டு திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்ட தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து பேசுகிறார். வியாழக்கிழமை காலை திருவாரூர் உதவி கலெக்டர் அலுவலகத்தில் திருவாரூர் தொகுதியில் போட்டியிடுவதற்கான வேட்பு மனு தாக்கல் செய்கிறார்.


0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior