உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், மார்ச் 31, 2011

விருத்தாசலம் சட்டமன்றத் தொகுதி, வேட்பாளர்களுக்கு சின்னம் அறிவிப்பு

விருத்தாசலம்:

          விருத்தாசலம் சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு புதன்கிழமை சின்னம் அறிவிக்கப்பட்டது.  

            விருத்தாசலம் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட காங்கிரஸ், தேமுதிக உள்பட 9 வேட்பாளர்களின் மனுக்கள் தேர்தல் ஆணையத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டன.  இந்நிலையில் தேர்தலில் போட்டியிட விரும்பாதவர்கள் மனுக்களை திரும்பப் பெற புதன்கிழமை (மார்ச் 30-ம் தேதி)  கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது.   இதில் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்ட வேட்பாளர்கள் யாரும் மனுவை திரும்பப் பெறவில்லை. 
  
தேசியக் கட்சி

             1. தேசியக் கட்சிகளான பிஎஸ்பி வேட்பாளர் அருட்செல்வனுக்கு யானை சின்னமும், 

             2. காங்கிரஸ் கட்சி வேட்பாளர் நீதிராஜனுக்கு கை சின்னமும், 

              3.பாஜக வேட்பாளர் பழமலைக்கு தாமரை சின்னமும் 

         வழங்கப்பட்டுள்ளது.  

தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள கட்சிகளான 

            ஐ.ஜே.கே. கிருஷ்ணமூர்த்திக்கு மோதிரம் சின்னமும், 
           தேமுதிக வேட்பாளர் முத்துக்குமாருக்கு முரசு சின்னம் 

ஒதுக்கப்பட்டுள்ளது.  
  
சுயேச்சை

சுயேச்சையாக போட்டியிடும் அருண்குமாருக்கு வயலின், 
சந்தானமூர்த்திக்கு தேங்காய், 
சுலோச்சனாவுக்கு மெழுகுவர்த்தி, 
ராஜேந்திரனுக்கு கூடை சின்னமும் ஒதுக்கப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior