உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஏப்ரல் 04, 2011

2011 தமிழகத் தேர்தல் : புவனகிரி சட்டமன்றத் தொகுதி மக்களின் ஒட்டு யாருக்கு?

புவனகிரி சட்டப்பேரவைத் தொகுதியில் விவசாயத் தொழிலாளிகளிடம், இந்த தேர்தலில் யாருக்கு உங்கள் வாக்கு? எனக் கேட்ட போது அவர்கள் பட்டென்று அளித்த பதில்கள்: 

உஷாராணி (பூந்தோட்டம்)

              திமுக ஆட்சியில் இலவசங்கள் கொடுத்துள்ளார்கள். ஆனால் விலைவாசி குறையவில்லை. மக்களுக்கு சேவை செய்யும் ஆட்சி வர வேண்டும். சேவை செய்யும் கட்சிக்குதான் ஓட்டுப் போடுவோம்.
 
முருகேசன் (வாக்கூர்)

             திமுக ஆட்சியில் இலவச திட்டங்கள் கொடுத்தார்கள், கருணாநிதி 5 ஆண்டுகள் ஆண்டு விட்டார். இந்த ஒருமுறை அம்மா வரட்டும். அவருக்கு மீண்டும் ஒரு முறை வாய்ப்பு கொடுப்போம்.


பிரியா (வெய்யலூர்)

                முதலில் மதுபானக் கடைகளை மூட வேண்டும். எங்களுக்கு இலவசம் வேண்டாம்ங்க. வீட்டில் பிறந்த குழந்தைகளுக்கு பிறப்பு மற்றும் ஜாதி சான்றிதழ்களை பள்ளியிலேயே வழங்க வேண்டும்.5 ஆண்டுகள் திமுக ஆண்டுள்ளது. இந்த முறை மாற்றம் தேவை. அதனால "அம்மா'வுக்கு ஓட்டுப் போடுவோம்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior