உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஏப்ரல் 04, 2011

கடலூர் மருத்துவக் கல்லூரியை நகர பகுதியில் அமைக்க நடவடிக்கை: அ.தி.மு.க. வேட்பாளர் எம்.சி.சம்பத்

கடலூர் : 

              ""கடலூர் மாவட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ள மருத்துவக் கல்லூரியை பொதுமக்களின் வசதிக்காக நகர பகுதியில் அமைக்க நடவடிக்கை எடுப்பேன்'' என அ.தி.மு.க., வேட்பாளர் சம்பத் கூறினார். 

இதுகுறித்து அ.தி. மு.க., வேட்பாளர் சம்பத் கூறியது: 

             அ.தி.மு.க., ஆட்சி பெறுப்பேற்றால் கடலூரில் தரமின்றி நடந்து வரும் பாதாள சாக்கடைத் திட்டத்தில் உள்ள குறைபாடுகளை போக்கி தரமாக அமைக்கவும், நகரில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க புறவழிச்சாலை அமைக்கவும், நகர மேம்பாட்டை கருத்தில் கொண்டு கரும்பு ஆராய்ச்சி பண்ணையில் புதிய பஸ் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுப்பேன். தொலைநோக்கு பார்வையோடு குடிநீர் திட்டங்களை கொண்டு நகராட்சி பகுதியில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கவும், மீனவர்களின் வாழ்வாதாரத்தை பெருக்கும் வகையில் துறைமுகத்தை நவீனப்படுத்தவும், மீன்களை இருப்பு வைக்க குளிர்பதன குடோன் அமைக்கப்படும். 

              கடலூர் நகர பகுதியில் சுகாதாரத்தை மேம்படுத்தி முன் மாதிரி நகராட்சியாக மாற்றுவேன். தேர்தல் அறிக்கையில் ஜெ., அறிவித்துள்ள வாக்குறுதிகள் அனைத்தும் தொகுதி மக்களுக்கு முழுமையாக கிடைக்க நடவடிக்கை எடுப்பேன். அரசு மகளிர் தொழிற் பயிற்சி நிலையத்தை பாதுகாப்பு கருதி வேறு இடத்தில் விடுதி வசதியுடன் ஏற்படுத்துவேன். மாவட்டத்திற்கென அறிவிக்கப்பட்டுள்ள அரசு மருத்துவக் கல்லூரியை, அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் மக்களின் நலன் கருதி நகர பகுதியில் அமைக்க நடவடிக்கை எடுப்பேன். 

                கடலூர் நகரையொட்டியுள்ள பாதிரிக்குப்பம், கோண்டூர், சாவடி, உண்ணாமலை செட்டிச்சாவடி, குண்டுஉப்பலவாடி உள்ளிட்ட ஊராட்சிகளில் உள்கட்டமைப்பு வசதியை மேம்படுத்துவேன். இவ்வாறு சம்பத் கூறினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior