உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஏப்ரல் 04, 2011

மதுரை லேடிடோக் கல்லூரியில் எம்.எஸ்சி., நானோ அறிவியல் படிப்பு வரும் கல்வியாண்டு முதல் துவங்குகிறது

          மதுரை லேடிடோக் கல்லூரியில் எம்.எஸ்சி., நானோ அறிவியல் படிப்பு, வரும் கல்வியாண்டு முதல் துவங்குகிறது.
  
கல்லூரி முதல்வர் மெர்ஸி புஷ்பலதா கூறியது: 

            பல்கலை மானியக் குழு, 51 லட்ச ரூபாய் நிதி வழங்கியுள்ளது. இந்நிதி மூலம் ஐந்தாண்டுகளும், அதன்பின் கல்லூரியின் சார்பிலும் பாடத்திட்டம் நடத்தப்படும். நானோ துகள்களை கண்டறியும் "அட்டாமிக் போர்ஸ் மைக்ரோஸ்கோப்' கருவி 31 லட்ச ரூபாய்க்கு வாங்கப்படுகிறது. தற்போது அரசு நிர்ணயித்த கல்வி கட்டணம் என்பதால், அறிவியலில் ஆர்வமுடைய மாணவிகள் மேற்படிப்புக்கு விண்ணப்பிக்கலாம். பி.எஸ்சி., இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் மற்றும் பயோ டெக் மாணவிகள் நானோ அறிவியல் படிப்புக்கு தகுதியுடையவர்கள். பொது நுழைவுத் தேர்வின் மூலம் மாணவிகள் சேர்க்கை நடைபெறும். ஏப்., 4 முதல் விண்ணப்பங்கள் வினியோகிக்கப்படுகிறது.

அதிக விபரங்களுக்கு  


0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior