உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஏப்ரல் 25, 2011

கால்நடை மருத்துவப் படிப்புக்கு மே 2 முதல் விண்ணப்பம்

             பிளஸ் டூ முடித்த மாணவர்கள் சேரும் வகையில், பி.வி.எஸ்சி. (கால்நடை மருத்துவப் படிப்பு) உள்ளிட்டவற்றுக்கு வரும் மே 2-ம் தேதி முதல் விண்ணப்பம் வழங்கப்படுகிறது. 
  
இது தொடர்பாக தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக பதிவாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 

             "2011-12-ம் கல்வி ஆண்டில் பி.வி.எஸ்சி. மற்றும் ஏ.எச்., பி.எஃப்.எஸ்சி., பி.டெக். (உணவு பதனிடுதல் தொழில்நுட்பம்), பி.டெக். (கோழியின உற்பத்தி தொழில்நுட்பம்) ஆகிய படிப்புகளில் மாணவர்களைச் சேர்க்க வரும் 2-ம் தேதி விண்ணப்ப விநியோகம் தொடங்குகிறது. விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள் மே 7-ம் தேதியாகும்.  

விண்ணப்பம் எங்கு கிடைக்கும்? 

            சென்னை வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரி, நாமக்கல்லில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரி, தூத்துக்குடியில் உள்ள மீன் வளக் கல்லூரி, மதுரை-கோவை-திருச்சி-ராஜபாளையம்-வேலூர் ஆகிய இடங்களில் உள்ள கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகப் பயிற்சி மையங்கள் ஆகியவற்றில் விண்ணப்பம் கிடைக்கும். 

            விண்ணப்பம் தொடர்பான விவரங்களை  www.tanuvas.ac.in  என்ற இணையளத்தில் தெரிந்து கொள்ளலாம்; அல்லது 044-25551586/87 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு அறியலாம். 

 ரேங்க் பட்டியல்-கவுன்சலிங்:

             விண்ணப்பித்த மாணவர்களுக்கு ஜூன் மாதம் 3-வது வாரம் மேலே குறிப்பிட்ட பல்கலைக்கழக இணையதளத்தில் ரேங்க் பட்டியல் வெளியிடப்படும். சென்னை வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரியில் ஜூலை 13, 14 ஆகிய தேதிகளில் கவுன்சலிங் நடைபெறும்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior