உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஜூன் 13, 2011

கடலூர் மாவட்டத்தில் ஆதிதிராவிட மற்றும் பழங்குடியினர் நல விடுதிகளில் சேர விண்ணப்பங்கள் வரவேற்பு

கடலூர் : 

          ஆதிதிராவிட நல விடுதிகளில் 2011-12 கல்வி ஆண்டில் காலியாக உள்ள இடங்களில் சேர்வதற்கு மாணவ, மாணவியர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
 

இது குறித்து கலெக்டர் அமுதவல்லி விடுத்துள்ள செய்திக்குறிப்பு: 

            கடலூர் மாவட்டத்தில் ஆதிதிராவிட மற்றும் பழங்குடியினர் நல விடுதிகளில் இலவச உணவு, உறைவிடமும் வழங்கப்படும். சிறப்பு வழிகாட்டி இலவசமாக அரசால் வழங்கப்படும்.இந்த விடுதிகளில் காலியாக உள்ள இடங்களில் சேர விரும்பும் மாணவ, மாணவிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விடுதியில் சேர்வதற்கு விண்ணப்பங்கள் அருகில் உள்ள விடுதி காப்பாளரிடம் பெற்றுக்கொள்ளலாம். 

                  சேர விரும்புவோர், முழுமையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வரும் 30ம் தேதிக்குள்ளும், கல்லூரி முதுகலை பட்டதாரி விடுதிகளில் சேர விரும்புவோர் வரும் ஜூலை 15ம் தேதிக்குள்ளும், சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளரிடம் ஒப்படைக்க வேண்டும். பெற்றோரின் ஆண்டு வருமானம் ஒரு லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 




0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior