உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஜூன் 17, 2011

கிணற்றுக் குளியல் - என் அனுபவம்





           கிராமத்தில் பிறந்து வளர்ந்தவன் ஆயினும்,  கிணற்றில்  குளித்த அனுபவம் இல்லை, முதல் முறையாக   கடந்த ஞாயிற்றுகிழமை ( 12.06.2011) அன்று 200 அடி ஆழமுள்ள கிணற்றில் குளிக்கும் வாய்ப்பு கிடைத்தது. கிணற்றில் குளிக்கும் வாய்ப்பு என்பதைவிட நீச்சல் கற்றுகொள்ளும்  வாய்ப்பாக இருந்தது.

கவனிக்க : எனக்கு தண்ணீரைக் கண்டாலே  பயம், கடற்கரைக்கு சென்றாலே கடலில் இறங்கினாலும் அதிகம் தூரம் சென்று குளிக்க மாட்டேன், சும்மா கரையிலே நின்று குளித்து விட்டு வருவேன்.  

            அவ்வளவு பயம் உள்ள நான் முதலில் கிணற்றில் குளிப்பவரை வேடிக்கை பார்க்கும்  எண்ணத்தோடுதான்  சென்றேன்.  என்னுடன் நன்கு நீச்சல் தெரிந்த உறவினர் 2 பேர் வந்திருந்தார்கள். முதலில் அவர்கள் தான் களத்தில் குளித்தார்கள்.  என்னைவிட சிறியவர்கள் கூட மிக அழகாக நீச்சல் அடித்தனர். 

               அவர்கள் நீச்சல் அடிப்பதை  பார்க்க  பார்க்க, எனக்கும் ஒரு வித ஆசையாக இருந்தது. சுமார் 15 நிமிடத் தற்குப் பிறகு  ஒருவழியாக தைரியத்தை வரவைத்து களத்தில் இறங்கினேன்.  முதலில் தண்ணீரில் மூழ்கிவிட்டேன். துணைக்கு வந்தவர்கள்தான் ஒரு வழியாக மேலே தூக்கினர். பிறகு அவர்கள் பிடித்து கொள்ள நான் நீச்சல் பழக ஆரம்பித்தேன். ஆரம்பத்தில் இருந்த பயம் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து ஆர்வமாக மாறியது. ஒரு வழியாக கை கால்களை உதைத்து நீச்சல் பழக  ஆரம்பித்தேன்......கற்றுக்கொண்டு இருக்கிறேன்.........விரைவில் ஒரு நீச்சல்காரனாக.................உங்கள் முன்.......................

இடம்: திருத்தணி அருகே உள்ள திருவலங்காடு கிராமத்தில் வபதியம்மன் கோயில் பின்புறம் கோடையிலும் வற்றாத பசுமையான நெற்வயல்களுக்கிடையே உள்ள 200அடி ஆழம் உள்ள கிணறு.



அதிர்ச்சி : நான் கிணற்றில் நீச்சல் பழக ஆரம்பித்த அன்றுதான் ஞாயிற்றுகிழமை ( 12.06.2011 , திருத்தணியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கிணற்றில் குளித்தபோது இறந்தனர் என்பதுதான் அதிர்ச்சியான செய்தி.







0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior