உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஜூலை 04, 2011

கடலூர் ரோட்டரி சங்கம் சார்பில் 1 லட்சம் மரக்கன்றுகள் நடத் திட்டம்

கடலூர்:

            ஓராண்டில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடுவதற்குக் கடலூர் ரோட்டரி சங்கம் திட்டமிட்டு உள்ளது.

             கடலூர் ரோட்டரி சங்க புதிய தலைவராக இராம.சனார்த்தனம், செயலராக  பா.குணசேகரன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர். புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா வெள்ளிக்கிழமை நடந்தது. ரோட்டரி சங்க முன்னாள் தலைவர் டி.ஜெயக்குமார் உள்ளிட்டோர் ரோட்டரி சாசனச் சான்றிதழை புதியத் தலைவர் ஜனார்த்தனம், செயலர் குணசேகரன் ஆகியோரிடம் ஒப்படைத்தனர்.

               அதைத் தொடர்ந்து புதிய நிர்வாகிகள் குழுவினர் பதவி ஏற்றுக் கொண்டனர். விழாவில், கடலூர் முதுநகர் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி பிரியாவுக்கு, பொறியியல் படிப்புக்காக, 4 ஆண்டுகளுக்கான கல்விச் செலவுத் தொகையை கடலூர் ரோட்டரி சங்கம் ஏற்றுக் கொள்வதாக அறிவிக்கப்பட்டது. குறிஞ்சிப்பாடியை அடுத்த கன்னித் தமிழ்நாடு அரசு உயர்நிலைப் பள்ளி, தொடர்ந்து 3 ஆண்டுகளாக பொதுத் தேர்வில் 100 சதவீதம் மாணவர்களை வெற்றி பெறச் செய்தமைக்காக, பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் 6 ஆசிரியர்களுக்கு நினைவுப் பரிசும், பாராட்டுப் பத்திரமும் வழங்கப்பட்டது.

               பள்ளியின் முதல் மாணவர் ஜான்சனுக்கு, 2 ஆண்டுகளுக்கான சீருடைகள் வழங்கப்பட்டன. இவற்றை புதிய தலைவர் சனார்த்தனம் வழங்கினார். இந்த ஆண்டுக்கான ரோட்டரியின் புதிய திட்டங்களை சனார்த்தனம் அறிவித்தார். ஓராண்டில் (2011-12) கடலூர் மற்றும் சுற்று வட்டாரங்களில், ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடப்படும் என்றும், தேர்வு செய்யப்படும் ஒரு பள்ளிக்கு, ரூ. 2 லட்சம் மதிப்பில், குடிநீர் வசதி செய்து கொடுக்கப்படும் என்றும் அவர் அறிவித்தார். முன்னாள் தலைவர் டி.ஜெயக்குமார் தலைமை வகித்தார். முன்னாள்  செயலர் சண்முகம் அறிக்கை சமர்ப்பித்தார்.

                முன்னாள் கவர்னர் எல்.ஜெயச்சந்திரன், துணை கவர்னர் எஸ்.நடராஜன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் சிறப்புரை நிகழ்த்தினார்.  குணசேகரன் நன்றி கூறினார்.






0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior