உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஜூலை 04, 2011

திட்டக்குடி அருகே ஓடும் 108 ஆம்புலன்சில் பெண்ணுக்கு பிரசவம்

திட்டக்குடி:
 
           திட்டக்குடி அருகே பள்ளகாளிங்கராய நல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் கருப்பன், விவசாயி. இவரது மனைவி கலைவாணி (வயது 27) நிறைமாத கர்ப்பிணியாக இருந்து வந்தார்.

               இந்த நிலையில் சனிக்கிழமை   இரவு 7.15 மணியளவில் கலைவாணிக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து அக்கம் பக்கத்தினர் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர்.   ஆம்புலன்ஸ் வந்ததும் கலைவாணியை திட்டக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். சிறிது நேரத்தில் கலைவாணிக்கு பிரசவ வலி அதிகமானது.

          இதைத்தொடர்ந்து ஆம்புலன்ஸ் நிறுத்தப்பட்டது. ஆம்புலன்ஸ் டிரைவர் மணிகண்டன், உதவியாளர் வெங்கடேசன் ஆகியோர் அருகில் இருந்த பெண்களை அழைத்து பிரசவம் பார்க்க உதவினர். அப்போது கலைவாணிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. இதையடுத்து தாயும்-சேயும் திட்டக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு இருவரும் நலமாக உள்ளனர். 
 
 
 
 

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior