உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஜூலை 04, 2011

திட்டக்குடி வெலிங்டன் ஏரி ரூ.20 கோடி செலவில் சீரமைப்பு: கலெக்டர் அமுதவல்லி பார்வையிட்டார்

 http://mmimages.mmnews.in/Articles/2011/Jul/63bf98bc-5f55-4219-96e1-f94d86855fa6_S_secvpf.gif

திட்டக்குடி:

              திட்டக்குடியை அடுத்துள்ள வெலிங்டன் ஏரியில் ரூ.20 கோடி செலவில் கரைகள் சீரமைக்கப்பட்டுள்ளன. இந்த ஏரி மூலம் 67 கிராமங்களை சேர்ந்த 24 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. திட்டக்குடி வந்திருந்த கடலூர் மாவட்ட கலெக்டர் அமுதவல்லி இந்த ஏரியை நேரில் பார்வையிட்டார்.

                மேலும் வாய்க்கால்களின் தற்போதிய நிலை, நீர் பிடிப்பு சீரமைக்கப்பட்டுள்ள கரை பகுதி குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து ஆனந்தகுடி, தேவங்குடி, டீ.வி. புத்தூர் வெள்ளாற்றங்கரையில் ரூ.15 கோடி செலவில் நடைபெற்று வரும் வெள்ள தடுப்பு பணிகள், இப்பகுதியில் இயங்கும் மணல் குவாரி ஆகியவற்றையும் கலெக்டர் பார்வையிட்டார் பொதுப்பணிதுறை செயற் பொறியாளர் பழனிகுமார், உதவி செயற் பொறியாளர் பொதுப்பணித்திலகம், உதவி பொறியாளர் பாலமுருகன் ஆகியோர் மாவட்ட கலெக்டரிடம் வெல்லிங்டன் ஏரி குறித்தும், வெள்ள தடுப்பு பணிகள் குறித்தும் விளக்கமளித்தனர்.

                   அரசு நீரினை பயன் படுத்துவோர் சங்கத்தலைவர் மருதாசலம் மற்றும் விவசாயிகள் மாவட்ட கலெக்டரிடம் விவசாயிகள் நலன் கருதி திட்டக்குடி பகுதி பகுதியில் இயங்கும் நெல் கொள் முதல் நிலையங்கள் தொடர்ந்து மேலும் 1 மாதத்திற்கு இயக்க வேண்டும் நெல் கொள்முதலில் வியாபரிகளின் தலையீட்டை தவிர்க்க வேண்டும் என முறையிட்டனர்.
மாவட்ட கலெக்டர் அமுதவல்லி விவசாயிகளிடம் பேசும் போது, 

               நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளின் நலன் கருதிதான் அரசு நிதி ஒதுக்கி உள்ளது. இதில் வியாபாரிகளின் தலையீட்டை அனுமதிக்க முடியாது. தற்போது நெல் பயிரிடப்படும் பாசன பகுதி நெல் அறுவடை செய்யும் விவசாயிகளின் நலன் பாதிக்கபட்டுள்ளதா? ஆகியவை குறித்து ஆய்வு செய்து, அவசியம் ஏற்பட்டால் நெல் கொள்முதல் நிலையங்கள் தொடர்ந்து இயங்க அரசுக்கு பரிந்துரை செய்யப்படும்






0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior