உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஜூலை 04, 2011

விருத்தாசலம் அருகே என்ஜின் கோளாறால் பாண்டியன் எக்ஸ்பிரஸ் நடு வழியில் நின்றது

விருத்தாசலம்:
 
             மதுரையில் இருந்து சென்னைக்கு பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரெயில் பயணிகளுடன் நேற்று இரவு புறப்பட்டு வந்தது. அதிகாலை 2 மணியளவில் ரெயில் விருத்தாசலம் அருகே ஈச்சங்காடு என்ற இடத்தில் வந்தபோது ரெயில் என்ஜினில் பழுது ஏற்பட்டு நின்று போனது.  

               இது குறித்து ரெயில் என்ஜின் டிரைவர் திருச்சி ரெயில்வே கோட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து ரெயில்வே அதிகாரிகள் விருத்தாசலத்தில் இருந்து மாற்று என்ஜினை வரவழைத்து அதன் மூலம் ரெயிலை இயக்கினர்.  ஒரு மணி நேர தாமதத்துக்கு பிறகு 3 மணிக்கு ரெயில் அங்கிருந்து சென்னை புறப்பட்டு சென்றது. இதன் காரணமாக தென் மாவட்டங்களில் புறப்பட்டு வந்த கன்னியாகுமரி, பொதிகை, ராமேஸ்வரம், நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயில் உள்பட அனைத்து ரெயில்களும் அந்தந்த ரெயில் நிலையங்களில் 1 மணி நேரம் நிறுத்தப்பட்டது.  

               இதேபோல் சென்னையில் இருந்து சேலத்துக்கு நேற்று இரவு பயணிகள் எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டு வந்தது. இரவு 11.45 மணியளவில் மதுராந்தகத்துக்கும், திண்டிவனத்துக்கும் இடையே தொழுப்பேடு என்ற இடத்தில் வந்தபோது என்ஜின் கோளாறால் ரெயில் நின்று போனது. உடனடியாக இது குறித்து ரெயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து ரெயில்வே டெக்னீசியன்கள் மற்றும் ஊழியர்கள் விரைந்து வந்து என்ஜின் கோளாறை சரிசெய்தனர். சுமார் 2 மணி நேர தாமதத்துக்கு பிறகு ரெயில் அங்கிருந்து புறப்பட்டு சென்றது. 
 
 
 
 
 

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior