உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஜூலை 06, 2011

சிதம்பரம் நடராஜர் கோயிலில் 5 வயதுக்குமேல் பேச்சு வந்த சிறுவனின் தேவார இன்னிசை கச்சேரி


சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆயிரங்கால் மண்டபத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற அரங்கேற்ற நிகழ்ச்சியில் தேவார இன்னிசை கச்சேரியை நிகழ்த்துகிறார் சென்னை மயிலாப்மயிலாப்பூரைச் சேர்ந்த மகேஷ்
சிதம்பரம்:

             ஸ்ரீநடராஜப்பெருமாள் அருளால் 5 வயதுக்குமேல் பேச்சு வந்த 11 வயது சிறுவனின் தேவார இன்னிசை கச்சேரி சிதம்பரம் நடராஜர் கோயில் ஆயிரங்கால் மண்டபத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

          சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த தொழிலதிபர் சுரேஷ், தேவிஸ்ரீ தம்பதியினருக்கு 2வது குழந்தையாகப் பிறந்தவர் மகேஷ். இவருக்கு பிறந்ததிலிருந்து 5 வயது வரை பேச்சு வராமல் இருந்தது. பேச்சு வருவதற்காக அவரது பெற்றோர் மயிலாப்பூர் கபாலீஸ்வரரையும், சிதம்பரம் நடராஜரையும் வேண்டியுள்ளனர்.  இந்நிலையில் அவருக்கு 5 வயதுக்கு மேல் பேச்சு வந்து முழுமையாகப் பேசத் தொடங்கினார். 

           இதனால் அவரது பெற்றோர் அச்சிறுவனுக்கு 8 வயதிலிருந்து தேவார இன்னிசையை கற்றுக் கொடுத்தனர். தற்போது முதல் அரங்கேற்ற நிகழ்ச்சியாக சிதம்பரம் நடராஜர் கோயில் ஆயிரங்கால் மண்டபத்தில் தேவார இன்னிசை நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. தொடர்ந்து 2 மணி நேரம் தேவார இன்னிசை பாடி சிறுவன் மகேஷ் அனைவரையும் வியக்க வைத்தார். அவருக்கு உறுதுணையாகச் சென்னையைச் சேர்ந்த ராமகிருஷ்ணனும், சதீஷ்குமாரும் மிருதங்கம் வாசித்தனர். 




0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior