உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஜூலை 06, 2011

விருத்தாசலத்தில் கரும்பு சாறிலிருந்து பானம் தயாரித்தல் பயிற்சி

விருத்தாசலம் : 

        விருத்தாசலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் கரும்பு சாறிலிருந்து பதப்படுத்தப்பட்ட பானம் தயாரித்தல் பயிற்சி வழங்கப்பட உள்ளது.

இதுகுறித்து விருத்தாசலம் வேளாண்மை அறிவியல் நிலைய தலைவர் சுப்ரமணியன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: 

         விருத்தாசலத்தில் தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்தின் கீழ் அமைந்துள்ள வேளாண்மை அறிவியல் நிலையத்தில் இம்மாதம் இரண்டாம் வாரத்தில் கரும்பு சாறிலிருந்து பதப்படுத்தப்பட்ட பானம் தயாரித்தல் பயிற்சி வழங்கப்பட உள்ளது. 

                கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பண்ணை சுயஉதவிக் குழுக்கள், சுயதொழில் செய்ய ஆர்வமுள்ளவர்கள், தொழில் முனைவோர் ஆகியோருக்கு இப்பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சிக்கு முதலில் வரும் நபர்கள் மட்டுமே தேர்வு செய்யப்படுவதால், கலந்து கொள்ள ஆர்வம் உள்ளவர்கள் விருத்தாசலம் வேளாண்மை அறிவியல் நிலையத்திற்கு நேரிடையாக வந்து தங்களது பெயரை பதிவு செய்யுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.





0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior