உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஜூலை 06, 2011

காட்டுமன்னார்கோவில் எம்.ஆர்.கே.,பொறியியல் கல்லூரியில் கூடுதல் இடங்கள்

காட்டுமன்னார்கோவில் : 

               காட்டுமன்னார்கோவில் எம்.ஆர்.கே., இன்ஜினியரிங் கல்லூரியில் இந்த ஆண்டு கூடுதலாக 60 இடங்கள் சேர்க்க ஏ.ஐ. சி.டி.இ., உத்தரவிட்டுள்ளது. 

             கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அடுத்த நாட்டார்மங்கலத்தில் சந்திரவதனம் அறக்கட்டளை சார்பில் எம்.ஆர்.கே., இன்ஜினியரிங் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி கடந்த 2009ம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது. இக்கல்லூரியில் சிவில், கம்ப்யூட்டர் அறிவியல், எலக்ட்ரிகல் மற்றும் எலக்ட்ரானிக் கம்யூனிகேஷன், மெக்கானிக்கல் ஆகிய பாடப் பிரிவுகள் உள்ளன. த

            ற்போது இக்கல்லூரியில் 600 மாணவர்கள் பயின்று வருகின்றனர். கிராமப்புற மாணவர்கள் நலன் கருதி மெக்கானிக்கல் இன்ஜினியரிங், டிப்ளமோ மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பிரிவுகளில் கூடுதல் இடங்கள் ஒதுக்கீடு வேண்டும் என கல்லூரி சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. அதனை ஏற்று ஏ.ஐ.சி.டி.இ., கூடுதலாக 60 இடங்களை ஒதுக்கி உத்தரவிட்டுள்ளது. அந்த இடங்களுக்கான சேர்க்கை தற்போது நடக்கிறது. இத்தகவலை கல்லூரி சேர்மன் கதிரவன் தெரிவித்துள்ளார்.





0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior