உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஆகஸ்ட் 04, 2011

திட்டக்குடியில் முதியோர் உதவித்தொகை கேட்டு போராடும் மூத்தக் குடிமக்கள்

 http://mmimages.mmnews.in/Articles/2011/Aug/9a4c5eb3-6a10-45cb-a08d-780778dc7165_S_secvpf.gif
 

திட்டக்குடி:
 
          திட்டக்குடியை அடுத்துள்ள கொட்டாரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆதிமூலம் (92) விவசாயி இவரது மனைவி அஞ்சலை (75) இவர்களுக்கு குழந்தையில்லை. ஒரு கூரை வீட்டில் குடியிருந்து வருகிறார்கள்.
 
            கடந்த 20 ஆண்டுகளாக இவரும், இவரது மனைவியும் இவரது வீட்டின் அருகில் பள்ளிக்கூடம், கோயில் உட்பட பொது இடங்களில் மரக்கன்றுகளை நட்டு வருகிறார்கள். சுமார் 500 மரங்கள் வரை இவரால் நடப்பட்டுள்ளன. பராமரிப்பு பணியையும் செய்து வருகிறார்கள். தற்போது கணவன், மனைவி இருவரும் கூலி வேலை செய்து வருகிறார்கள். இருவரும் கடலூர் சென்று மாவட்ட கலெக்டர் அமுதவல்லியை நேரில் சந்தித்து மனு கொடுத்தனர்.

                அதில் அவர்கள், கடந்த 50 ஆண்டுகளாக நாங்கள் வளர்த்து வரும் மரக்கன்றுகளே எங்களின் பிள்ளைகளாக உள்ளனர். ஆனால் அவற்றை பொது இடத்தில் நட்டு விட்டதால் நாங்கள் பயன்படுத்த இயலாது இந்த சூழ்நிலையில் கருணை அடிப்படையிலாவது முதியோர் உதவித்தொகை வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர். 
 
 
 
 

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior