உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஆகஸ்ட் 04, 2011

கடலூர் மாவட்டத்தில் ஆடிப் பெருக்கு கொண்டாட்டம்


ஆடிப்பெருக்கை முன்னிட்டு சிதம்பரத்தை அடுத்த கொள்ளிடக்கரையில் திருமண மாலையை தண்ணீரில் விடும் புதுமணத் தம்பதி. நாள்: புதன்கிழமை.
சிதம்பரம்:

          ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு காவிரித் தாயை வழிபடும் வகையில் சிதம்பரத்தை சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த திரளான மக்கள் வல்லம்படுகை அருகே கொள்ளிடம் ஆற்றங்கரையில் புதன்கிழமை குவிந்தனர்.  

               காவிரி டெல்டா கடைமடை பகுதியான சிதம்பரத்தை அடுத்த கொள்ளிடக்கரையில் புதன்கிழமை, சுற்றுப் பகுதியில் உள்ள மக்கள் குடும்பத்துடன் வந்து காவிரி அன்னையை வழிபட்டு ஆடிப்பெருக்கை கொண்டாடினர்.   ஓடும் ஆற்று நீரில் திருமண மாலையை விட்டால் தங்கள் குடும்பம் செல்வச் செழிப்போடும், புதுமணத் தம்பதிகள் வளத்தோடும் இருப்பர் என்பது ஐதீகம். இதனால் புதுமணத் தம்பதிகள் தங்களது திருமண மாலையை நீரில் விட்டு மங்கல நாணை பிரித்து, கோர்த்து காவிரி அன்னைக்கு படையல் வைத்து வணங்குவர்.  

                   திரளான மக்கள் குடும்பத்தினருடன் வந்து மாவிளக்கு போட்டு, மஞ்சள் கயிறு, கருகமணி, வெற்றிலை, பாக்கு, அவல், பொரி, பழங்கள் வைத்து பூஜை செய்து வழிபட்டனர். 






0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior