உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், மார்ச் 08, 2012

கடலூர் செயின்ட் ஜோசப் கல்லூரியில் தொழில்நெறி வழிகாட்டும் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம்

கடலூர் :

       தொழில்நெறி வழிகாட்டும் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் கடலூர் செயின்ட் ஜோசப் கல்லூரியில் நடந்தது.
 
    மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், கடலூர் செயின்ட் ஜோசப் கல்லூரி இணைந்து நடத்திய கருத்தரங்கிற்கு கல்லூரி முதல்வர் ரட்சகர் தலைமை தாங்கினார். மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் செந்தில்குமார் வரவேற்றார். தொழில்நெறி வழிகாட்டும் கண்காட்சியை சப் கலெக்டர் கிரண்குராலா துவக்கி வைத்து, கட்டுரை, பேச்சு, பொது அறிவுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கிப் பேசினார். பேராசிரியை ஜெயந்தி ரவிச்சந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.
 
    வருமான வரித்துறை துணை ஆணையர் நந்தகுமார் "உங்களால் முடியும்' என்ற தலைப்பில் பேசினார். தொடர்ந்து மாணவ, மாணவிகளின் சந்தேகங்களுக்கு சப் கலெக்டரும், துணை ஆணையரும் விளக்கம் அளித்தனர்.
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் "தனியார் துறையில் வேலை வாய்ப்பு குறித்து' விளக்கம் அளித்தார். கருத்தரங்கில் 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் தில்லைநாதன் நன்றி கூறினார்.









0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior